அப்ப உன்னை சாகடிப்பன்...ஒரு குழந்தை தொழிலாளியின் குமறல்-வீடியோ
ஆக்கம்: சின்னக்குட்டி | June 30, 2008, 4:36 pm | மறுமொழிகள்
ஆக்கம்: சின்னக்குட்டி | June 30, 2008, 4:36 pm | மறுமொழிகள்
தவறுகளும் தீர்வுகளும். பாகம்.3.
ஆக்கம்: விசயக்குமார் | June 14, 2008, 10:28 am | மறுமொழிகள்
ஆக்கம்: விசயக்குமார் | June 14, 2008, 10:28 am | மறுமொழிகள்
தவறு.6.விசேசங்களுக்குச் செல்லும்போது விலையுயர்ந்த ஆபரணங்களை குழந்தைகளுக்குப் போட்டுவிட்டு, அவர்களை விளையாட விடாமல் அருகிலேயே இருக்கச் சொல்வது.காரணம்குழந்தைகள் விரும்புவது ஆடை ஆபரணங்களை அல்ல, சுதந்திரமாக விளையாடுவதையே. விளையாட்டின் மூலம் அவர்களுக்கு பலருடன் பழகும் வய்ப்புக் கிடைக்கிறது. நம்மை அதிகம் தொந்தரவு செய்யாமல் இருப்பர். தீர்வுஆபரணங்கள் இல்லாமல் எளிய...தொடர்ந்து படிக்கவும் »
பப்பு - Word Power
ஆக்கம்: சந்தனமுல்லை | June 3, 2008, 7:41 am | மறுமொழிகள்
ஆக்கம்: சந்தனமுல்லை | June 3, 2008, 7:41 am | மறுமொழிகள்
தமிழ்நாடு சென்னைகர்நாடகா - பெங்களூருமகாராஷ்ட்ரா - மும்பைகோவா - பாலாஜி பனாஜி..பாலாஜி! பி.கு:பப்பு மாநிலங்கள் மற்றும் தலைநகரங்கள் சரியாக சொல்கிறாள். And she intentionaly says panaji as balaji. (பப்பு @ 11 மாதங்களில்)பப்பு, ஏன் அத்தைய கிள்ளறே?"சும்மா, விளையாட்டுக்கு!"(புதிதாக, இப்பொழுது, பாராட்ட கற்றுக்கொண்டிருக்கிறாள். )"ஆ..சூப்பரா இருக்கே...!" - நான் படுக்கைவிரிப்பை மாற்றிய போது!"இந்த ட்ரெஸ் நல்லா இருக்கே!" -...தொடர்ந்து படிக்கவும் »
ஏமாந்தியா?
ஆக்கம்: அருட்பெருங்கோ | June 2, 2008, 10:51 pm | மறுமொழிகள்
ஆக்கம்: அருட்பெருங்கோ | June 2, 2008, 10:51 pm | மறுமொழிகள்
காலையில் படியிறங்கும்பொழுது
கீழ்வீட்டுக் குழந்தை முறைத்துப்பார்த்தபடி நின்றது.
அதனை சிரிக்க வைக்க
கையாட்டி சிரித்தபடி நான் கீழிறங்க,
சலனமில்லாமல் பார்த்துக்கொண்டு
என் தலை மறையும் நேரம்
கையாட்டத் துவங்கியது.
திரும்பி நான் எட்டிப்பார்க்க,
‘ஏமாந்தியா?’ என்பதாய் தலையாட்டி
கோணல் வாய்வைத்து சிரித்தது.
கையாட்டலைவிட தலையாட்டல்...தொடர்ந்து படிக்கவும் »
தவறுகளும் தீர்வுகளும், பாகம்.2.
ஆக்கம்: விசயக்குமார் | May 31, 2008, 7:28 pm | மறுமொழிகள்
ஆக்கம்: விசயக்குமார் | May 31, 2008, 7:28 pm | மறுமொழிகள்
தாய்மை என்பது அன்பும், பாசமும், சகிப்புத்தன்மையும் நிறைந்தது. குழந்தை அறியாமை நிறைந்தது. அதைப் போக்க அறியும் வேகத்துடன் சுட்டித்தனம் நிறைந்தது. குழந்தைகள் என்றும் சிறந்த குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் நாம்தான் எல்லா நேரங்களிலும் சிறந்த பெற்றோராக இருக்க முடிவதில்லை.தவறு.4. குழந்தை தவறு செய்தால் தண்டனை கொடுப்பதுதான் திருத்தும் வழி என்று நினைப்பது.காரணம்...தொடர்ந்து படிக்கவும் »
சுட்டிகள் பற்றி ஒரு சுட்டி
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | May 31, 2008, 1:21 am | மறுமொழிகள்
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | May 31, 2008, 1:21 am | மறுமொழிகள்
இந்த காலத்து சுட்டிகளை பார்க்கும் போது இறை நம்பிக்கையே போய்விடும் போலிருக்கின்றது. பொடிசுகளாய் இருந்து கொண்டு அதுகள் பண்ற கூத்துகளை பார்த்து "அட குழந்தைதானே விட்டுத் தள்ளு"னு சொல்ல மனசு வருவதில்லை.ஒரு வயசே ஆன வாண்டு ஒன்று அப்படியே கையை வீசி அடிக்கின்ற அடி குட்டி ரவுடி போலிருக்கும். தனக்கு முக்கியத்துவம் தராமல், தன்னை யாரும் சட்டைபண்ணாதிருந்தால் ஏங்கி ஏங்கி அது...தொடர்ந்து படிக்கவும் »
சொல்லாதீங்க......................
ஆக்கம்: புதுகைத் தென்றல் | May 30, 2008, 6:14 pm | மறுமொழிகள்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | May 30, 2008, 6:14 pm | மறுமொழிகள்
"இவனைக் கட்டுப்படுத்தவே முடியலை...விஷமம் தாங்கலை. இரு இரு ஸ்கூல் திறக்கட்டும்.உன்னை முதலில் கொண்டுபோய் தள்ளிவிடறேன்.""இருடி! அடிக்கிற டீச்சரா கிடைக்கணும்.அப்பத்தெரியும்."" இவளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டாதான் நிம்மதியா இருக்கும்""ஸ்கூல் திறக்கட்டும். தரத் தரன்னு இழுத்துகிட்டுபோய் ஸ்கூலில் சேத்துட்டுதான் மறுவேலை"இதை எல்லாம் கேட்ட பின்னாடி பிள்ளை ஸ்கூல்போக...தொடர்ந்து படிக்கவும் »
தேர்வு 
ஆக்கம்: ஜெயமோகன் | May 30, 2008, 3:41 pm | மறுமொழிகள்

ஆக்கம்: ஜெயமோகன் | May 30, 2008, 3:41 pm | மறுமொழிகள்
இன்று அஜிதனுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள். நாலைந்து நாட்களாகவே அருண்மொழி பதற்றமாக இருந்தாள். பதற்றத்தை எனக்கும் தொற்றவைக்க முயன்றாள். நான் பதற்றப்படக்கூடாது என்ற எண்ணத்துடன் இருந்தாலும் மெல்லமெல்ல மாறிக் கொண்டிருப்பதாகவும் எனக்கு ஓர் எண்ணம்.
காலையில் அருண்மொழி எழுந்துவந்ததும் நான் என் வழக்கமான உபதேசத்தை ஆரம்பித்தேன். ”இதோ பார் அருணா, அவன் என்ன மார்க்...தொடர்ந்து படிக்கவும் »
எறும்புக்கு உப்புமா வைத்த எட்டாவது வள்ளல்
ஆக்கம்: அருட்பெருங்கோ | May 29, 2008, 4:00 am | மறுமொழிகள்
ஆக்கம்: அருட்பெருங்கோ | May 29, 2008, 4:00 am | மறுமொழிகள்
காரக்குழம்பு வைத்தால் காரமாக இருக்க வேண்டுமென்பதன் புரிதலில் உப்புமா என்றால் உப்பாக இருக்க வேண்டுமென என் அக்கா தவறாக புரிந்து கொண்ட ஒரு காலைப்பொழுதில் தட்டில் வைத்த உப்புமாவை தொடாமல், தொட்டுக்கொள்ள வைத்திருந்த சர்க்கரையை மட்டும் உள்ளே தள்ளி கொண்டிருந்தாள் ஜனனி. அதைக் கவனித்த அக்கா, ‘ஜனனி, இப்போ ரெண்டு பேர்ல யார் மொதல்ல சாப்பிட்றாங்கன்னு பாக்கலாம் சரியா? தட்டுல...தொடர்ந்து படிக்கவும் »
சயின்ஸ் என்ஸ்பரிமெண்ட்ஸ்
ஆக்கம்: இம்சை | May 27, 2008, 11:10 pm | மறுமொழிகள்
ஆக்கம்: இம்சை | May 27, 2008, 11:10 pm | மறுமொழிகள்
உங்க வீட்டு குட்டீஸ்க்கு இதை...தொடர்ந்து படிக்கவும் »
நான் வளர்கிறேனே..மம்மி!!
ஆக்கம்: சந்தனமுல்லை | May 26, 2008, 8:31 am | மறுமொழிகள்
ஆக்கம்: சந்தனமுல்லை | May 26, 2008, 8:31 am | மறுமொழிகள்
பப்பு சாப்பிட/பால் குடிக்க அடம் பிடிக்கும்போது, ஆதி என்கிற பொம்மைக்கு கொடுக்க போவதாக பாவ்லா காட்டுவேன். பப்பு "ஆதிக்கு குடுக்காதே, நான் குடிக்கறேன்" என்று உடனே வாங்கி சாப்பிட்டு விடுவாள்.சமீபத்தில் (2 வாரங்களுக்கு முன்) அவள் அடம் பிடித்தபோது, ஆதிக்கு கொடுக்க போவதாக சொல்லி பொம்மையை கையில் எடுத்துக் கொண்டேன். "ஆதி குடிடா... டேஸ்டா இருக்கா?" என்றெல்லாம் சொல்லிக்...தொடர்ந்து படிக்கவும் »
அத்திரி பாச்சா கொழுக்கட்டை
ஆக்கம்: கண்மணி | May 23, 2008, 4:50 am | மறுமொழிகள்
ஆக்கம்: கண்மணி | May 23, 2008, 4:50 am | மறுமொழிகள்
குட்டீஸ் நல்லா இருக்கீங்களா?விடுமுறையெல்லாம் இனிமையாக கழிந்திருக்கும் என்று நம்புகிறேன்.நானும் அதிக வேலை காரணமாக பதிவு போட முடியலை.இதோ ஒரு குட்டிக் கதையுடன் உங்களைச் சந்திக்கிறேன்...ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான்.அவனுக்கு பக்கத்து ஊரில் பெண்ணெடுத்து திருமணம் செய்து வைத்தனர்.வியாபார விஷயமாக அவன் வெளியூர் சென்று விட்டதால் திருமணம் முடிந்து பலநாள் ஆகியும் அவனால்...தொடர்ந்து படிக்கவும் »
எண்களும் அளவுகளும்
ஆக்கம்: சந்தனமுல்லை | May 22, 2008, 11:52 pm | மறுமொழிகள்
ஆக்கம்: சந்தனமுல்லை | May 22, 2008, 11:52 pm | மறுமொழிகள்
அம்மா புடிக்குமா உனக்கு??..புடிக்கும்!எவ்ளோ புடிக்கும்?அஞ்ஞ்சு புடிக்கும்..!! பப்பு குறிப்பு: பப்பு எண்களை கற்றுக் கொள்கிறாள். And she thinks five is the maximum!! குழந்தைகள் உலகம்தான்...தொடர்ந்து படிக்கவும் »
உணவைத் தேடி
ஆக்கம்: வடுவூர் குமார் | May 16, 2008, 7:40 pm | மறுமொழிகள்
ஆக்கம்: வடுவூர் குமார் | May 16, 2008, 7:40 pm | மறுமொழிகள்
கொஞ்ச நாட்களுக்கு முன்பு யோகன் பாரீஸ் ஒரு பதிவை இங்கு போட்டிருந்தார்.சற்று முன் இந்த நகர் படத்தை பார்க்கும் போது அது தான் ஞாபகம் வந்தது அதை நீங்களும் பாருங்களேன்.Searching For Food - For more of the funniest videos, click hereகுழந்தைகள் உலகில் நமக்கு...தொடர்ந்து படிக்கவும் »
தவறுகளும் தீர்வுகளும் பாகம்.1
ஆக்கம்: விசயக்குமார் | May 12, 2008, 12:43 pm | மறுமொழிகள்
ஆக்கம்: விசயக்குமார் | May 12, 2008, 12:43 pm | மறுமொழிகள்
நாம் குழந்தை வளர்ப்பில் செய்யும் தவறுகளையும், அதற்கான தீர்வுகளையும் இங்கே தர முயன்றிருக்கிறேன். உங்கள் மதிப்புமிக்க விமர்சனத்தை எதிர்நேக்கி,தவறு.1 கீழே விழுந்த குழந்தையை உடனே சென்று தூக்குவது. உடனே அழுகையை அடக்குவதற்காக ‘இந்த இடம் தானே, தள்ளி விட்டது’ என்று கீழே விழுந்த இடத்தை உதைப்பது அல்லது அடிப்பது.காரணம் உடனே தூக்கும் பெற்றோரது குழந்தையே அதிகமாக அழும். அந்த...தொடர்ந்து படிக்கவும் »
அனுசரணை - மற்றவர்களின் தேவை
ஆக்கம்: சின்ன அம்மிணி | April 25, 2008, 7:42 pm | மறுமொழிகள்
ஆக்கம்: சின்ன அம்மிணி | April 25, 2008, 7:42 pm | மறுமொழிகள்
சக மனிதர்களின் இயலாமை, செயல்பாடுகளின் எல்லையைப்புரிந்து கொண்டு எந்த அளவுக்கு நாம் அனுசரணையாய் இருக்கிறோம். மலையை வளைப்பது மட்டுமே ஆற்றலாய்க்கருதுகிறோம். முடியாதவர்களை ஒரு படி குறைவாகத்தான் நினைக்கிறோம். இது சின்ன வயசில் பள்ளிப்படிப்பிலேயே ஆரம்பம் ஆகிறது. அவளைப்பார் எப்பவும் முதல் மதிப்பெண்தான். இவனைப்பார் விளையாட்டில் எப்பவும் வெற்றிதான் என்று ஒப்பீடுகள்....தொடர்ந்து படிக்கவும் »
சிந்தனையை சிதைக்கும் சிறுவர் டிவிக்கள் - தினமணியிலிருந்து
ஆக்கம்: ஆயில்யன். | April 21, 2008, 10:25 pm | மறுமொழிகள்
ஆக்கம்: ஆயில்யன். | April 21, 2008, 10:25 pm | மறுமொழிகள்
3 வயது குழந்தை முதல், பள்ளி மாணவ, மாணவிகள் வரை குழந்தைகளுக்கான சேனல்களின் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கின்றனர்.விரும்பி பார்க்கின்றனர் என்பதைவிட அதில் மூழ்கிவிடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.இத்தகைய சேனல்களை மட்டுமே குழந் தைகள் விரும்பிப் பார்ப்பதால், அவர்களுக்கு வேறு எதன் மீதும் கவனம் செலுத்த இயலாத அளவுக்கு மூளையின் செயல்திறன்...தொடர்ந்து படிக்கவும் »
பெற்றோர்களே உஷார்...
ஆக்கம்: amutha krishna | April 21, 2008, 12:16 pm | மறுமொழிகள்
ஆக்கம்: amutha krishna | April 21, 2008, 12:16 pm | மறுமொழிகள்
இப்போது எல்லாம் பள்ளிகளில் ப்ராஜக்ட் அது இது என்று எதாவது சொல்லி எப்பவும் மாணவர்கள் தங்கள் பையில் பேனா, பென்சில் மட்டும் இல்லாமல்.. ஃபெவிகால், வைட்னர், என்று வைத்து உள்ளனர். அதன் மணம் பிடித்துப் போய் அதை முகர்ந்துப் பார்க்கும் குழந்தைகள் நாளடைவில் அதற்கு அடிமை ஆகின்றனர். தினம் கொஞ்ச நேரம் என்று ஆரம்பிக்கும் பழக்கம் கேட்டில் முடிகிறது. கொஞ்ச கொஞ்சமாய் மூளையை மழுங்கச்...தொடர்ந்து படிக்கவும் »
குழந்தைகள் எந்த வயதில் உடற்பயிற்சி ஆரம்பிக்கலாம் ?
ஆக்கம்: சேவியர் | April 21, 2008, 12:59 am | மறுமொழிகள்
ஆக்கம்: சேவியர் | April 21, 2008, 12:59 am | மறுமொழிகள்
குழந்தைகள் பிறந்த உடனேயே அவர்களை சமூகத்தில் மிகப்பெரிய இடத்தில் அமர வைக்க வேண்டுமென பெற்றோர் முடிவு செய்து விடுகிறார்கள். இதன் விளைவு தான் இரண்டரை வயதாகும் போதே குழந்தைகள் பால் மணம் வீசும் வாயுடன் “பிளே ஸ்கூல்” செல்வதும், மழலைக்கே உரித்தான மகத்துவங்கள் மறுதலிக்கப்படுவதும்.
இதன் தொடற்சியாக பல கூத்துகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஐந்து வயது சிறுவன் அதைச்...தொடர்ந்து படிக்கவும் »
என் குட்டியின் சுட்டித்தனம்..
ஆக்கம்: காரூரன் | April 6, 2008, 11:12 am | மறுமொழிகள்
ஆக்கம்: காரூரன் | April 6, 2008, 11:12 am | மறுமொழிகள்
"யாழினிது குழலினிது என்பார் அவர் தம் மழலை மொழி கேளாதோர்" என்பார்கள். இந்த வார்த்தைகள் முதலில் வார்த்தைகளாகவே தோன்றின. குழந்தைகள் கிடைத்த பின்பு தான் அதன் அர்த்தம் புரிய ஆரம்பித்தது. எனக்கு இரண்டு வால்கள் ( குழந்தைகளை சொல்கிறேன்...) . மகளுக்கு 9 வயது, மகனுக்கு 5 வயது. அக்காவிடம் தான் நினைப்பதை இலகுவாக தன் சாதுரியத்தால் சாதித்துவிடுவான் மகன். தாயின் உடை, சகோதரியின் உடை...தொடர்ந்து படிக்கவும் »
குழந்தைகளின் கற்றலில் பிரச்னை அல்லது குறைபாடு
ஆக்கம்: Badri | April 1, 2008, 9:59 pm | மறுமொழிகள்
ஆக்கம்: Badri | April 1, 2008, 9:59 pm | மறுமொழிகள்
தமிழ் வளர்ச்சித்துறை, இந்த ஆண்டு தொடங்கி, இனி வரும் ஆண்டுகளில் சிறந்த தமிழ் மென்பொருளுக்கான விருது ஒன்றை உருவாக்கியுள்ளது. இதற்கு கணியன் பூங்குன்றனார் விருது என்று பெயர். இதற்குத் தகுதிபெற “இந்த மென்பொருள் தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கவேண்டும்”.அதற்கான தகவல் கிடைத்ததும், சும்மா இருக்கட்டுமே என்று NHM Writer, NHM Converter ஆகியவற்றுக்காக...தொடர்ந்து படிக்கவும் »
பள்ளி மாணவர் வன்முறை: நுகர்வு வெறியில் பிறக்கும் கொலைவெறி 
ஆக்கம்: தமிழரங்கம் | March 30, 2008, 8:29 am | மறுமொழிகள்

ஆக்கம்: தமிழரங்கம் | March 30, 2008, 8:29 am | மறுமொழிகள்
பள்ளி மாணவர் வன்முறை:நுகர்வு வெறியில் பிறக்கும் கொலைவெறி சம்பவம் 1. தெற்கு தில்லி, அரியானா எல்லையில் இருக்கும் குர்கான் நகரம். அங்கு யூரோ சர்வதேசப் பள்ளியில் அவினாஷ், வினய் இருவரும் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். அதே வகுப்பில் படிக்கும் அபிஷேக் தியாகியுடன் தகராறு வருகிறது. அவினாஷின் அப்பா ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர். வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கிறார்....தொடர்ந்து படிக்கவும் »
குட்டீஸ்களுக்கு சில பாதுகாப்புக் குறிப்புகள்
ஆக்கம்: பொன்வண்டு | March 30, 2008, 12:00 am | மறுமொழிகள்
ஆக்கம்: பொன்வண்டு | March 30, 2008, 12:00 am | மறுமொழிகள்
குட்டீஸ் ! கோடைகாலம் ஆரம்பிச்சுடுச்சு. நீங்களும் தேர்வுகள் எல்லாம் முடித்துவிட்டு சுட்டித்தனமா சுற்றுவீங்க இல்லையா? எப்பவும் அப்பா, அம்மா உங்களையே கவனித்துக் கொள்ளமுடியாது இல்லையா? இதோ நீங்களே பின்பற்ற உங்களுக்காக சில பாதுகாப்பு வழிமுறைகள்.* அப்பா, அம்மா அலுவலகம் போயிருக்கும் போது நீங்கள் எங்கேயாவது வெளியே போகணும்னா தனியாக எங்கேயும் செல்லாதீர்கள். முதலிலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பப்பர மிட்டாய்!
ஆக்கம்: லக்கிலுக் | March 29, 2008, 6:37 am | மறுமொழிகள்
ஆக்கம்: லக்கிலுக் | March 29, 2008, 6:37 am | மறுமொழிகள்
முன்பெல்லாம் குழந்தைகளுக்கு கதை சொல்ல வீட்டில் தாத்தா, பாட்டி இருப்பார்கள். இல்லையேல் இரவில் அப்பவோ, அம்மாவோ தூங்குவதற்கு முன்னால் கதை சொல்லுவார்கள். ஈசாப் குட்டிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், நல்லதங்காள் கதை, இராமாயணம், மகாபாரதம் என்று ஏகப்பட்ட கதைகளை என் சிறுவயதில் பெற்றோரிடமோ, தாத்தாவிடமோ கேட்டிருக்கிறேன்.இப்போதைய தலைமுறை வித்தியாசமாக இருக்கிறது. கணவன் - மனைவி...தொடர்ந்து படிக்கவும் »
குருவி தலையில் பனங்காய் – சம்மர் கேம்ப் தலைவலி (பிள்ளைகளுக்கு)
ஆக்கம்: கிருத்திகா | March 24, 2008, 4:08 am | மறுமொழிகள்
ஆக்கம்: கிருத்திகா | March 24, 2008, 4:08 am | மறுமொழிகள்
இதோ வந்தாச்சு பள்ளிப் பிள்ளைகளுக்கான விடுமுறைக்காலம். அதே சமயம் அத்தனை தினசரிகளிலும் சுவரொட்டிகளிலும் முளைச்சாச்சு விடுமுறைக்கால வகுப்புக்களுக்கான விளம்பரங்கள்.என் மகனின் நன்பனின் அம்மா “எங்க வீட்டு சிபிய இந்த தடவை மூணு சம்மர் கேம்ப்ல சேர்த்திருக்கேன்னு” ரொம்ப பெருமையா சொன்னாங்க எனக்கு ரொம்ப பாவமா இருந்தது.பள்ளி நாட்களிலாவது பிள்ளைகள் விடுப்பு எடுக்கலாம்,...தொடர்ந்து படிக்கவும் »
குழந்தைகள் கடவுளுக்கு எழுதியவை 
ஆக்கம்: சரவணன் | March 17, 2008, 1:43 am | மறுமொழிகள்

ஆக்கம்: சரவணன் | March 17, 2008, 1:43 am | மறுமொழிகள்
குழந்தைகள் கடவுளுக்கு எழுதிய கடிதங்கள். கீழேயே தமிழில் தந்துள்ளேன். மழலை மொழியைச் சிதையாமல் பெயர்ப்பது கஷ்டம் என்பதால் விரும்புபவர்கள் அசலையே படித்துக்கொள்க. இந்தக் கள்ளங்கபடமற்ற வெள்ளை உள்ளத்தை வளரும்போது இழப்பதுதான் மனித வாழ்வின் மிகப் பெரிய சோகமாகப் படுகிறது. கூடவே இந்தப் பிஞ்சுக் குழந்தைகளைக் கடவுள் என்கிற கற்பிதத்தை நம்ப வைத்திருக்க வேண்டுமா என்றும்...தொடர்ந்து படிக்கவும் »
200 குழந்தைகளுக்கான உணவிற்காக உங்கள் குரலை உயர்த்துங்கள்!
ஆக்கம்: திரு | March 16, 2008, 2:50 pm | மறுமொழிகள்
ஆக்கம்: திரு | March 16, 2008, 2:50 pm | மறுமொழிகள்
நண்பர்களே!இலங்கை அரசால் கடந்த 6ம் தேதி கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளரும், பதிப்பக உரிமையாளருமான வெ.யசிகரன், அவரது துணைவியார் மற்றும் சக பத்திரிக்கையாளர்களை விடுவிக்கவும், இலங்கை அரசின் சட்டப்புறம்பான இக்கைது நடவடிக்கையால் உணவு உட்பட்ட எல்லா அடிப்படை தேவைகளும் பாதிக்கப்படும் 200 அநாதை குழந்தைகளுக்கான நீதிகேட்டும் உங்கள் முறையீட்டை அனுப்ப கோருகிறேன். இது...தொடர்ந்து படிக்கவும் »
குரங்கு பொம்மை! 
ஆக்கம்: பாபு மனோகர் | March 16, 2008, 2:22 am | மறுமொழிகள்

ஆக்கம்: பாபு மனோகர் | March 16, 2008, 2:22 am | மறுமொழிகள்
என் நண்பர் ஒருவரை பார்க்க அவர் வீட்டிற்கு போனேன். வீட்டுப் பணியாள் நான் வந்திருப்பதை உள்ளே போய் சொல்ல, நண்பரின் மனைவி என்னை வரவேற்று அமரச் சொன்னார். நண்பர் குளித்துகொண்டிருப்பதாகவும் சிறிது நேரத்தில் வந்துவிடுவாரென்றும் கூறினார்.நான் சோபாவில் உட்கார்ந்தேன்.நண்பரின் மூன்று வயது பெண்குழந்தை; தரையில் அமர்ந்து, ஒரு ஓவிய முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள்....தொடர்ந்து படிக்கவும் »
சாதனை Vs வேதனை 
ஆக்கம்: பாச மலர் | March 15, 2008, 12:19 am | மறுமொழிகள்

ஆக்கம்: பாச மலர் | March 15, 2008, 12:19 am | மறுமொழிகள்
(ரத்னேஷ் அவர்களின் பதிவு படித்து அங்கே பின்னுட்டமாய்ப் பகிர்ந்து கொண்ட செய்தியைச் சற்றே விரிவாகப் பதிவிடுகிறேன்..)"மாமாவுக்கு ரைம்ஸ் சொல்லிக் காட்டு..""ABCD சொல்லிக்காட்டு..""திருக்குறள் மொத்தமும் நேர்வரிசை, தலைகீழ் வரிசையில் தப்பு விடாமச் சொல்லுவா..""நீயுந்தான் இருக்கியே..கணக்கு வாய்ப்பாடு ஒழுங்காச் சொல்லத்தெரியுதா..அந்தப் பொண்ணைப் பாரு...உலக நாடுகளின் கரன்ஸி, தலைநகரம்...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ் பாடல் பங்களிப்பு பாகம்-3
ஆக்கம்: நானானி | March 14, 2008, 12:50 am | மறுமொழிகள்
ஆக்கம்: நானானி | March 14, 2008, 12:50 am | மறுமொழிகள்
உற்சாகம் பீறிட ஓடி வந்த பாடல்கள்.1)மாங்காய் தலை முருகன் கட்டை வண்டியில் ஏறி சந்தை கடை சென்றான் விதவிதமாய் கடைகள் சந்தையிலே கண்டான் லட்டு கடைக்குச் சென்று லட்டு வேண்டும் என்றான் லட்டு கேட்ட பையா துட்டு எங்கே என்றான் மாங்காய்தலை முருகன் துட்டு இல்லை என்றான் லட்டு மிட்டாய்காரன் லட்டும் இல்லை என்றான்2)சின்ன விஜயராணி செல்ல விஜயராணி வடைக்காகப் பாடுகிறாள் வானம் பார்த்து...தொடர்ந்து படிக்கவும் »
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!!
ஆக்கம்: பிருந்தன் | March 13, 2008, 7:59 am | மறுமொழிகள்
ஆக்கம்: பிருந்தன் | March 13, 2008, 7:59 am | மறுமொழிகள்
போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். தான் செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன.எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருககிறது.பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து, நான்கு மாதத்தில் அப்பா என்று...தொடர்ந்து படிக்கவும் »
பள்ளியில் சேர்க்கும் போது கவனிக்க வேண்டியவை
ஆக்கம்: பாச மலர் | March 12, 2008, 12:01 am | மறுமொழிகள்
ஆக்கம்: பாச மலர் | March 12, 2008, 12:01 am | மறுமொழிகள்
"ஆமா..இப்பவேருந்து சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சாதான் ஸ்கூல் போறப்ப கஷ்டமிருக்காது"ன்னு சொல்லி ABCD சொல்லிக்கொடுக்கிறாங்க அம்மா..அப்பாவுக்கும் அதே மனநிலை..இது என் உறவினர் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சி..இதை நேற்றுத் தொலைபேசியில் கேட்ட போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த அம்மா என் ஒன்று விட்ட சகோதரி என்பதால் உரிமையுடன் ஓரிரு வார்த்தைகள் பேச முடிந்தது. அந்தக்...தொடர்ந்து படிக்கவும் »
நாங்களும் சின்னவங்களாயிட்டோம்
ஆக்கம்: காட்டாறு | March 9, 2008, 11:09 am | மறுமொழிகள்
ஆக்கம்: காட்டாறு | March 9, 2008, 11:09 am | மறுமொழிகள்
சின்ன புள்ளையா இருக்குறச்சே படிச்ச பாடமெல்லாம் மறக்காம இருக்கனுமின்னு டீச்சர் வீட்டுப்பாடம் கொடுத்தாங்க. முதல் பாட்டு ஞாபகத்துக்கு வர தான் மூளைய கசக்க வேண்டியதா இருந்துச்சி. அப்புறமா எல்லாரும் வரிசை கட்டி நிக்குறாங்க. சரியா செய்திருக்கேனான்னு பார்த்து சொல்லுங்கப்பா. சரியா இல்லைன்னாலும் ‘பார்த்து’ மார்க் போடுங்க. வயசான காலத்துல இப்பிடி முதியோர் கல்வி கற்க...தொடர்ந்து படிக்கவும் »
பறவைகள் பலவிதம்!
ஆக்கம்: பிரபு ராஜதுரை | March 7, 2008, 6:46 am | மறுமொழிகள்
ஆக்கம்: பிரபு ராஜதுரை | March 7, 2008, 6:46 am | மறுமொழிகள்
இன்றைய கோகுலம் இதழில், போன வருடம் எனது மகள் அனுப்பிய கவிதை...இதனை எவ்வாறு கூறுவது என்று தெரியாதலால், கவிதை என்கிறேன். எனது நவீன கவிதை நண்பர்கள், இது கவிதையா? என்று சண்டைக்கு வர...தொடர்ந்து படிக்கவும் »
பண்டாண்டா....எவண்டா அது?
ஆக்கம்: நானானி | March 6, 2008, 5:45 pm | மறுமொழிகள்
ஆக்கம்: நானானி | March 6, 2008, 5:45 pm | மறுமொழிகள்
மழலை மொழி படிக்கலாமா? அட்மிஷன் இலவசம்!!ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தாள் அண்ணன் மகளும் அவளின் இரு சுட்டிப்பசங்களும்.மதியம் உணவு முடித்து நாங்கள் பெட்ரூமில் ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.திடீரென்று ஆரம்பித்தான் சின்னவன் ஷன்னு. "பண்டாண்டா...பண்டாண்டா..!"'என்னதுடா பண்டாண்டா' என்று அவன் அம்மாவும் என் மகளும் கேட்டனர். இருவரும் மாறிமாறி கேட்க கேட்க அவனும் 'ஆத்தா...தொடர்ந்து படிக்கவும் »
CHILD PSYCHOLOGY - பெற்றோர்களுக்கான பாடம் : 6
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 4, 2008, 5:41 am | மறுமொழிகள்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 4, 2008, 5:41 am | மறுமொழிகள்
ஜூஜ்ஜுலூ, அச்சுலு.....பப்ளிக்குட்டி,என்ன இதெல்லாம் என்று பார்க்கிறீர்களா?சின்னக் குழந்தையை அதன் பாஷையில்கொஞ்சுவதாக நினைத்துக்கொண்டுநாம் செய்யும் கோமாளித்தனம் தான்.இதைப் பார்த்து "நீ பேசும் பாஷையேபுரியலையே"! என்பது போல் சிரிக்கும் குழந்தை.இது மிகத்தவறான ஒன்று. குழந்தையின்மொழிவளர்ச்சி ஏற்படுவது தன் காதில்கேட்கும் மொழி, வார்த்தைகளை வைத்துதான்.பிறந்த குழந்தைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
சிறார்கள் இராணுவமாவதற்கு எதிராக...
ஆக்கம்: தமிழரங்கம் | February 26, 2008, 12:39 pm | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழரங்கம் | February 26, 2008, 12:39 pm | மறுமொழிகள்
"கையெழுத்திட்டென்ன, குழந்தைகளைக் காத்தென்ன?"எல்லாம் தத்தமது தேசங்களின் இலாபத்தின் முகமூடிதாம்.ப.வி.ஸ்ரீரங்கன்24.02.2008இலங்கையில் குழந்தைகளை இராணுவத்துக்காக-போராளிகளாக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.அத்தகைய சட்டத்தை மீறுபவர்கள்மீது 20 ஆண்டு காலச் சிறைத் தண்டனையும் உண்டாம்!எனினும்,குழந்தைகளைக் குண்டுபோட்டுக் கொல்லும் அந்த அரசை எந்தவொரு அமைப்போ அல்லது அரசுகளோ இதுவரை...தொடர்ந்து படிக்கவும் »
படித்தால் மட்டும் போதுமா?
ஆக்கம்: பாச மலர் | February 20, 2008, 6:22 am | மறுமொழிகள்
ஆக்கம்: பாச மலர் | February 20, 2008, 6:22 am | மறுமொழிகள்
"ஏண்டி உன் பையனைக் கூட்டிட்டு வரலே கல்யாணத்துக்கு? நான் பாத்து எவ்ள நாளாச்சு?""அவனுக்கு யூனிட் எக்ஸாம் நடக்குது..லீவு போட முடியல.."(பையன் படிப்பது 1ம் கிளாஸ்)"ஜுரமாவது ஒண்ணாவது...ஸ்கூல் மட்டம் போடக்கூடாது..போய்த்தான் ஆகணும்.."(பையனுக்கு உண்மையிலேயே ஜுரம்.)"23.75 தான் வாங்கிருக்க..மீதி 1.25 மார்க் எங்கே போச்சு? சதீஷ் பாத்தியாடா? எப்படி 100 வாங்குகிறான் எப்போதும்?"படம் வரைஞ்சே பொழுது...தொடர்ந்து படிக்கவும் »
ஒரு குட்டி poem!
ஆக்கம்: அஞ்சலி | February 20, 2008, 2:09 am | மறுமொழிகள்
ஆக்கம்: அஞ்சலி | February 20, 2008, 2:09 am | மறுமொழிகள்
நான் தமிழில ஒரு குட்டி poem எழுதியிருக்கிறன்.சின்ன சின்ன எலிபூனையைப் பார்த்தால் கிலிதுள்ளி ஓடும் எலிபூனை பிடித்தால் வலிஎனது வலைப்பதிவுக்கு வந்து செல்லும் அனைவருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
வட்டம் வட்டமாய் 
ஆக்கம்: veenaapponavan | February 15, 2008, 7:07 pm | மறுமொழிகள்

ஆக்கம்: veenaapponavan | February 15, 2008, 7:07 pm | மறுமொழிகள்
அதிகாலை வந்திறங்கிபனிக் குல்லாயைக் கழற்றி விட்டுதிறந்த வாய் மூடாமல்சென்ட்ரல் ஸ்டேஷனைப்பார்த்தது கைக்குழந்தைவாழ்க்கையில் முதல் முறையாய்.உயரமான கூரையை அண்ணாந்துபார்த்துக் கொண்டிருந்த போது'நல்லா இருக்கா..இதான் சென்ட்ரல் ஸ்டேஷன்' என்றுஅம்மாவின் குரல் காதருகேமெதுவாய்க் கேட்டது.திரும்பி அம்மாவைப் பார்த்து சிரித்தது.அப்படியே நான்காவது நடைமேடையில் இருந்தஎடை...தொடர்ந்து படிக்கவும் »
பெற்றோர்களுக்கான - child physchology :5
ஆக்கம்: புதுகைத் தென்றல் | February 14, 2008, 3:20 am | மறுமொழிகள்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | February 14, 2008, 3:20 am | மறுமொழிகள்
பிறந்த குழந்தை பேசமுடியாது, அசைய முடியாது,தன்நிலையை எடுத்துச் சொல்ல முடியாதுஎன்பதாலேயே பசிக்குப் பால கொடுத்தால் போதும்,தூங்கிவிடும் குழந்தை என்ற மனநிலைதான்அனைவருக்கும்.பிரசவம் முடிந்தபின் தாய் சோர்வாக இருப்பதாலும்,மருத்துவ உதவி தேவைப்படுவதாலும், தாய்தான்அதிகம் கவனிக்கப் படுகிறாள்.இங்கு கவனிக்கப் படவேண்டியது குழந்தையும் தான்.பிரசவமான களைப்பு தாய்க்கு...தொடர்ந்து படிக்கவும் »
தூங்கு தம்பி தூங்கு.
ஆக்கம்: சேவியர் | February 8, 2008, 8:03 am | மறுமொழிகள்
ஆக்கம்: சேவியர் | February 8, 2008, 8:03 am | மறுமொழிகள்
சரியான அளவு தூக்கம் கிடைக்காத குழந்தைகள் அதிக எடை சிக்கலுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது என நியூசிலாந்திலுள்ள ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.
குழந்தைகளின் தினசரி, வார, மாத, வருட தூக்கத்தின் அளவுகளையும் அவர்களுடைய மருத்துவ அறிக்கை பரிசோதனைகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
591 குழந்தைகளை அவர்களுடைய ஒரு வயது, மூன்றரை வயது, ஏழுவயது என...தொடர்ந்து படிக்கவும் »
18. பேரன்டிங் ஸ்டைல்
ஆக்கம்: இம்சை | February 6, 2008, 7:18 pm | மறுமொழிகள்
ஆக்கம்: இம்சை | February 6, 2008, 7:18 pm | மறுமொழிகள்
குழந்தை வளர்ப்பு பற்றி ஒவ்வொறுவருக்கும் நிறைய மாறுபட்ட கண்ணோட்டம் உண்டு. சிலர் தங்கள் சொந்த வாழ்வில் தங்கள் பெற்றோரால் நடை முறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை தங்கள் குழந்தை வளர்ப்பில் பயன்படுத்துவர். சிலர் பிரண்ட்ஸ் கிட்ட இருந்து கற்றுக்கொள்வர், சிலர் புத்தகத்தில் உள்ளதை பாலோ செய்வார்கள்.குழந்தை வளர்ப்பு பற்றி நிறையா ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. அவற்றில்...தொடர்ந்து படிக்கவும் »
முள்ளாகும் முல்லைகள்..!
ஆக்கம்: பூமகள்..! | February 6, 2008, 2:36 am | மறுமொழிகள்
ஆக்கம்: பூமகள்..! | February 6, 2008, 2:36 am | மறுமொழிகள்
முள்ளாகும் முல்லைகள்..!காலை அவசரத்தில்நூடில்ஸ் சிற்றுண்டி..!வாயில் பாதி..தட்டில் மீதி..!ஃப்ரி.கே.ஜி ரைம்தேர்வு.. - மனனம்மனத்தில்..!மாலை வந்ததும்பூட்டிய வீடு..!சோர்ந்து சாவி வாங்கிதொலைக்காட்சி காட்டில்கார்டூன் நண்பர்கள்..!துப்பாக்கி தூக்கிசுட்டு வீழ்த்தும்தீரர்கள்..!நீரின்றி மழலைஇமைக்காமல் குடிக்கும்வன்முறை பானம்..!குடித்து தீர்ந்ததும்குற்றுயிராய் கிடக்கும்மனிதம்...தொடர்ந்து படிக்கவும் »
17. குழந்தையின் உணவு- பாகம் 2
ஆக்கம்: புதுகைத் தென்றல் | February 3, 2008, 8:56 pm | மறுமொழிகள்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | February 3, 2008, 8:56 pm | மறுமொழிகள்
இமயமலையைக் கூட சர்வ சாதாரணமாக ஏறிவிடலாம். குழந்தையைச் சாப்பிட வைப்பது "பிரம்ம ப்ரயத்தன்ம்" என்பார்களே அது மாதிரி மிக கஷ்டமான வேலை.நேரத்திற்கு உண்ணாத குழந்தை வளர்ச்சி குறைந்து, மெலிவாக காணப்படும். சில குழந்தைகள் சரியாக சாப்பிடாவிட்டாலும் நாள் முழுதும் ஆக்டிவாக இருப்பார்கள்.சிறுதீணிகளுக் கென்று ஒரு நேரம் வைத்துக் கொண்டு அப்போது மாத்திரம் கொடுப்பது நலம். பிஸ்கட்,...தொடர்ந்து படிக்கவும் »
17. குழந்தையின் உணவு- பாகம் 2
ஆக்கம்: புதுகைத் தென்றல் | February 3, 2008, 8:56 pm | மறுமொழிகள்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | February 3, 2008, 8:56 pm | மறுமொழிகள்
இமயமலையைக் கூட சர்வ சாதாரணமாக ஏறிவிடலாம். குழந்தையைச் சாப்பிட வைப்பது "பிரம்ம ப்ரயத்தன்ம்" என்பார்களே அது மாதிரி மிக கஷ்டமான வேலை.நேரத்திற்கு உண்ணாத குழந்தை வளர்ச்சி குறைந்து, மெலிவாக காணப்படும். சில குழந்தைகள் சரியாக சாப்பிடாவிட்டாலும் நாள் முழுதும் ஆக்டிவாக இருப்பார்கள்.சிறுதீணிகளுக் கென்று ஒரு நேரம் வைத்துக் கொண்டு அப்போது மாத்திரம் கொடுப்பது நலம். பிஸ்கட்,...தொடர்ந்து படிக்கவும் »
15. குழந்தையின் உணவு
ஆக்கம்: புதுகைத் தென்றல் | January 30, 2008, 7:46 pm | மறுமொழிகள்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | January 30, 2008, 7:46 pm | மறுமொழிகள்
தாய்ப்பாலே சிறந்த உணவு. அதற்கு நிகர் ஏதும் இல்லை. அது குழந்தையின் உரிமை.குழந்தை சற்று வளர்ந்த பிறகு திட ஆகாரம் கொடுக்கத் துவங்க வேண்டும்.(வெறும் பால் மாத்திரமே (6/7 மாதம் வரை) குடித்து வளரும் குழந்தைகள் சரியாக சாப்பிடமாட்டார்கள்)சத்துமாவு கஞ்சியும் நல்லது தான். அத்துடன் NESTUM (RICE), CERELAC, போன்றவையும் கொடுக்கலாம். நெஸ்டம் (புழுங்கல் அரிசிக் கஞ்சி போன்றது) செரிலாக-...தொடர்ந்து படிக்கவும் »
தாயும் சேயும், நமக்குச் சிலையும்.....
ஆக்கம்: யோகன் பாரிஸ்(Johan-Paris) | January 30, 2008, 5:16 pm | மறுமொழிகள்
ஆக்கம்: யோகன் பாரிஸ்(Johan-Paris) | January 30, 2008, 5:16 pm | மறுமொழிகள்
இணையத்துள் மேயும் போது, இந்த அற்புதமான அழகிய கணங்களைக் கண்டேன்.அத் தாயின் நாணம், அருமையாகப்...தொடர்ந்து படிக்கவும் »
ஜனனி.. ஜனனி..
ஆக்கம்: அருட்பெருங்கோ | January 30, 2008, 9:25 am | மறுமொழிகள்
ஆக்கம்: அருட்பெருங்கோ | January 30, 2008, 9:25 am | மறுமொழிகள்
என்னுடைய தீபாவளிப் பதிவுகளைப் படித்துவிட்டு “நீங்க எழுதற கவிதைகளவிட கவித்துவமானது, ஒரு குழந்தை, அதுவும் பெண்குழந்தை வளர்வதை அருகிலிருந்து ரசிப்பது” அப்படின்னு ஒரு தோழி சொன்னாங்க. உண்மைதான். குழந்தைகளின் குறும்பும், ரகளையும் அருகிலிருந்து அனுபவிப்பதைவிட சுகமானது வேறென்ன? ஊரிலிருக்கும் சொற்ப நாட்களில் அக்கா மகள் ஜனனியின் குறும்புகளை வீடியோ/புகைப்படங்களாக...தொடர்ந்து படிக்கவும் »
பேரண்டிங் டிப்ஸ் - 5
ஆக்கம்: புதுகைத் தென்றல் | January 29, 2008, 10:50 pm | மறுமொழிகள்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | January 29, 2008, 10:50 pm | மறுமொழிகள்
1. கேட்டதை செய்யுங்கள்வாரத்தில் ஒரு நாள் தங்களால் இயன்ற நேரம் குழந்தையோடு செலவிடுங்கள். குழந்தைக்குப் பிடித்த விளையாட்டு விளையாடுதல், (அது உங்களுக்கு பிடிக்காட்டிக் கூட), கதை சொல்லுதல் போன்றவைகள்செய்யலாம். தங்களின் கவனத்தை வேறு எதிலும் சிதறாமல் அந்த நேரம் ப்ரத்யேயமாக குழந்தைக்கானதாக இருக்கட்டும். (பார்க்குக்கு கூட்டிகிட்டு போயிட்டு,"நீ விளையாடு, நான்...தொடர்ந்து படிக்கவும் »
என் அகராதியில் இருந்து....
ஆக்கம்: Shona | January 29, 2008, 7:17 am | மறுமொழிகள்
ஆக்கம்: Shona | January 29, 2008, 7:17 am | மறுமொழிகள்
நிலு 2 வயதாக இருக்கும் போது அவளின் சொற்கள், என் அகராதியில் இருந்து....ஆ ஈஈஸிக்கா - Ah! Beautifulஇங்கிமஸ் தி - Christmas treeமிக் - Milkஷெப் - Sleepஷெகுஷா? - C'est quoi ? (அது என்ன? பிறெஞ் மொழியில் )காஸிருக்கா? -...தொடர்ந்து படிக்கவும் »
12. பேரண்டிங் டிப்ஸ் - 4 "சும்மா இருக்க விடுங்க"
ஆக்கம்: புதுகைத் தென்றல் | January 26, 2008, 11:28 pm | மறுமொழிகள்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | January 26, 2008, 11:28 pm | மறுமொழிகள்
இப்பல்லாம் குழந்தைகள் சொல்லும் டயலாக்," நாங்க ரொம்ப பிஸி"ஸ்கூல் தவிர பாட்டு, பரதம், அது இதுன்னு பிரதம மந்திரிய விட ரொம்ப பிஸி ஷெட்யூல் தான்.இது நல்லதான்னு கேட்டா? யோசிக்காம இல்லைன்னே சொல்லலாம்."GIVE YOUR CHILD SOME TIME TO BE IDLE" அப்படிங்கற கட்டுரையை படிச்சேன்.அதுல எழுத்தாளர் என்ன சொல்லியிருக்கார்னா!,"பாவங்க இந்த குழந்தைங்க. எதையும் பொறுமையா ரசிக்க, பட்டாம்பூச்சி பறப்பதை பார்த்து...தொடர்ந்து படிக்கவும் »
அரவணைப்பு Vs செல்லம்
ஆக்கம்: பாச மலர் | January 26, 2008, 4:56 am | மறுமொழிகள்
ஆக்கம்: பாச மலர் | January 26, 2008, 4:56 am | மறுமொழிகள்
காட்சி-1:ஒரு கடையில் ஒரு பையன் உருண்டு உருண்டு அழுது கொண்டிருக்கிறான்.அம்மா: அது போல் கார் ஏற்கனவே இருக்குடா..வேண்டாம்.அப்பா: நாலு சாத்து சாத்துனா சரியாப் போயிரும்..(சாத்துகிறார்..)பையன் இன்னும் உருண்டு கொண்டிருக்கவே, மனனவியை பில் பணம் கொடுக்கச் சொல்லிவிட்டுத் தர தரவென்று பையனை இழுத்துச் செல்கிறார்.காட்சி-2:மகள்: எனக்கு பெப்ஸி வேணும்..அம்மா: ஏற்கனவே 2 தடவை...தொடர்ந்து படிக்கவும் »
வயதேறும் - வடுமாறா
ஆக்கம்: சினேகிதி | January 19, 2008, 3:47 pm | மறுமொழிகள்
ஆக்கம்: சினேகிதி | January 19, 2008, 3:47 pm | மறுமொழிகள்
child clinical psychologists மற்றும் social wokers என ஐவர் அடங்கிய குழு ஒன்று விவரிக்கமுடியாத ஒரு எதிர்பார்ப்புடன் 14 வயதான மைதிலியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். பொதுவாகவே 15 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு psychological assessment பண்ணும்போது குடும்ப உறுப்பினர் ஒருவர் கூட இருக்கவேண்டும் என்பது நியதி. ஆனால் மைதிலியோ தான் assessment க்கு வரும்போது தன் குடும்ப உறுப்பினர்கள் வரக்கூடாதென்று...தொடர்ந்து படிக்கவும் »
இந்த மொழித் திணிப்பை என்னான்னு சொல்ல?
ஆக்கம்: ILA(a)இளா | January 16, 2008, 3:00 pm | மறுமொழிகள்
ஆக்கம்: ILA(a)இளா | January 16, 2008, 3:00 pm | மறுமொழிகள்
மாண்டாட்டுதம்பூச்சிபெளபெளஅப்பா ஒய்டாப்டாப்மானாபாச்சுபியூவ்ன்பூவ்ச்சுச்சுஆயிகூக்குகாயிபூனுகவுஸ் பீனு-1பீனு-2ஊய்யாஐயாமிம்மீடாட்லிபீயாட்டாலர்கோஸுசாக்குகீயயாக்சூப்பட்ரெக்குபோயிஉன்னிஉன்னிஅக்கு ஈபாபாட்டாஈமோபீப்பபுர்ஸூஉய்யிஇன்னும் நிறைய இருக்குங்க, இவ்ளோதான் இப்போ ஞாபகத்துக்கு வருது. பின்னூட்டத்துல சொல்லிடறேன் இல்லைன்னா இதுலையே சேர்த்துடறேன். இந்த...தொடர்ந்து படிக்கவும் »
வளரும் பயிர்கள் வாடாதிருக்க ...
ஆக்கம்: சினேகிதி | January 14, 2008, 3:46 pm | மறுமொழிகள்
ஆக்கம்: சினேகிதி | January 14, 2008, 3:46 pm | மறுமொழிகள்
குழந்தைப்பருவம் ,பதின்மம் ,முதுமை இப்படி எல்லா வயதிலும் இன்னொரு மனிதனின் அன்பு ,பாசம், நேசம் ,ஆதரவு நமக்குத் தேவைப்படுகிறது. அம்மாவாக, அப்பாவாக, சகோதரமாக, நண்பனாக, வாழ்க்கைத்துணையாக இப்படி ஏதோ ஒருவடிவில் எல்லாமனிதனும் பல சந்தர்ப்பங்களில் இன்னொருவரின் துணையை எதிர்பார்க்கிறான். அன்புக்காக ஏங்குகிறான்.அது உரிய நேரத்தில் கிடைக்காது போனால் சமூகத்துக்குப்...தொடர்ந்து படிக்கவும் »
ஒரு புது மொழி படிச்சன்!
ஆக்கம்: அஞ்சலி | January 12, 2008, 4:44 am | மறுமொழிகள்
ஆக்கம்: அஞ்சலி | January 12, 2008, 4:44 am | மறுமொழிகள்
எனக்கு ஒரு bookmark கிடைச்சது. அது என்ரை friend Natalia தந்தது. அவ Egypt க்கு போய்ட்டு வந்து எனக்கு அந்த gift தந்தா.அதுல ancient Egyptians எழுத்துகள் இருக்குது. அதை Hieroglyphic alphabet எண்டு சொல்லுறது. அது நல்ல வடிவா இருந்தது. எனக்கு அது நல்லா புடிச்சிருந்தது.நான் என்ரை பெயர் அந்த மொழியில எழுதி வைச்சிருக்கிறன். படம் படமா எழுத நல்லா இருக்கு. :)என்ரை பெயரை அந்த மொழியில என்ரை blog லயும் எழுதுவம் எண்டு பாத்தன். Internet ல அதை...தொடர்ந்து படிக்கவும் »
சிறு குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள எளிய நடைமுறை - பத்துக் கட்டளைகள்
ஆக்கம்: TamilNenjam | January 7, 2008, 6:19 am | மறுமொழிகள்
ஆக்கம்: TamilNenjam | January 7, 2008, 6:19 am | மறுமொழிகள்
1) தயவுசெய்து சிறுகுழந்தைகளுக்கு ஏ,பி,சி,டி..என எழுத்துக்களை முதலில் சொல்லிக்கொடுக்காதீர்கள்.2) அதேபோல இளம்சிறார்களை நோட்டு, பேனா,பென்சில், புத்தகம் முதலியவற்றின் பக்கமே அண்டவிடாதீர்கள்.3) எழுத்துக்களை கற்றுத் தருவதை தடைசெய்யவேண்டும்.4) நாம் குழந்தையாக இருக்கும்போது நமது அம்மா, அப்பா, அண்டை வீட்டாரிடம் முதலில் தமிழ் பேசத்தானே கற்றுக்கொண்டோம். எழுதப்படிக்க பிறகுதானே...தொடர்ந்து படிக்கவும் »
குட்டீஸ்!!!வேட்டையபுரம் அரண்மனையில் எத்தனை பொம்மைகள்
ஆக்கம்: கண்மணி | January 3, 2008, 3:41 am | மறுமொழிகள்
ஆக்கம்: கண்மணி | January 3, 2008, 3:41 am | மறுமொழிகள்
குட்டீஸ்!!!ஒரு சின்ன கணக்கு.சந்திரமுகியில் வந்த வேட்டையபுரம் அரண்மணை மாதிரி ஒரு பெரிய மாளிகை.அந்தமாளிகையில் 100 மாடிப்படிகள் இருக்கின்றன.ஒவ்வொரு படியிலும் படியின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பொம்மைகள் வைக்கப் படுகின்றன.உதாரணமாக முதல் படியில் 1 பொம்மை... இரண்டாவதில் 2 பொம்மைகள்... மூன்றாவதில் மூன்று பொம்மைகள்........50 வது படிக்கட்டில் 50 பொம்மைகள்.........இப்படியாக 100 வது படியில் 100...தொடர்ந்து படிக்கவும் »
மண்ணில் விண்மீன்கள் - அபியின் பார்வையில் 
ஆக்கம்: ஆசிப் மீரான் | December 27, 2007, 1:31 am | மறுமொழிகள்

ஆக்கம்: ஆசிப் மீரான் | December 27, 2007, 1:31 am | மறுமொழிகள்
சிவாஜி படம் பார்த்து விட்டு வெளியில் வந்ததும் என் மகனிடம் 'எப்படிடா இருக்கு?'ன்னு கேட்டேன்.'Its Ok. But common sense is very uncommon here'என்றான் ஒற்றை வரியில் - ஏழாம் வகுப்பு படிக்கும் அவன்ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது அவனது பிறந்தநாளில் பள்ளி மேடையில் மற்றக் குழந்தைகள் எல்லாம் 'நான் வளர்ந்தால் டாக்டராக விரும்புகிறேன்' 'இஞ்சினியராக விரும்புகிறேன், ' விஞ்ஞானியாக விரும்புகிறேன்'என்று சொன்னபோது...தொடர்ந்து படிக்கவும் »
மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம்!!
ஆக்கம்: நானானி | December 19, 2007, 6:45 am | மறுமொழிகள்
ஆக்கம்: நானானி | December 19, 2007, 6:45 am | மறுமொழிகள்
மழலை பேசும் குழந்தைகளோடு உறவாடுவதும் உரையாடுவதும் எனக்குப் பிடித்தமானதொன்று.அண்ணன் குழந்தைகள், சகோதரிகள் குழந்தைகள், பிற குழந்தைகள் என்றும்,இன்று அவர்களின் குழந்தைகள் என்றும் மழலைகள் சூழ இருப்பதையே மிகவும் விரும்புவேன்.கள்ளமில்லா அவர்கள் அன்பிலும் சிரிப்பிலும் என்னையே மறந்து விடுவேன்.குழந்தைகளைக் கவர்வதில் என்னுடைய 'வழியே தனி...தொடர்ந்து படிக்கவும் »
தேவதை தூங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா?
ஆக்கம்: ஜெகதீசன் | November 29, 2007, 11:20 pm | மறுமொழிகள்
ஆக்கம்: ஜெகதீசன் | November 29, 2007, 11:20 pm | மறுமொழிகள்
நீங்கள் இதற்கு முன் எப்போதாவது தேவதை தூஙகுவதைப் பார்த்திருக்கிறீர்களா?இதுவரை பார்த்தது இல்லை எனில் இங்கு பார்த்துக்கொள்ளுங்கள்........ஏங்க வீட்டு குட்டி தேவதை இப்படித் தான்...தொடர்ந்து படிக்கவும் »
விளையாட்டான விஷயமல்ல...!
ஆக்கம்: தமிழ்மகன் | November 24, 2007, 4:37 am | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழ்மகன் | November 24, 2007, 4:37 am | மறுமொழிகள்
காரை எடுத்துக் கொண்டு சீறிப் பாயலாம். சாலையில் எதிர் வருகிறவர்களை எல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
குட்டீஸ் குறும்பு
ஆக்கம்: Baby Pavan | November 23, 2007, 5:35 am | மறுமொழிகள்
ஆக்கம்: Baby Pavan | November 23, 2007, 5:35 am | மறுமொழிகள்
இந்த குட்டி செய்யரது...தொடர்ந்து படிக்கவும் »
நான் பண்ண சர்க்கஸ்
ஆக்கம்: Baby Pavan | November 22, 2007, 8:20 pm | மறுமொழிகள்
ஆக்கம்: Baby Pavan | November 22, 2007, 8:20 pm | மறுமொழிகள்
நான் இப்படி பண்ணா ஏன் அம்மா திட்றாங்க, கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்க......தொடர்ந்து படிக்கவும் »
