கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?
June 29, 2008, 9:39 am | மறுமொழிகள்
June 29, 2008, 9:39 am | மறுமொழிகள்
நேற்று மக்கள் தொலைக்காட்சியில் 'சிரிப்போ சிரிப்பு' என்ற நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். [நல்ல தமிழுக்காகவே இந்தத் தொலைக்காட்சி பலராலும் விரும்பிப் பார்க்கப் படுகிறது.] நிகழ்ச்சியின் தொகுப்பாளினி பல்வேறு காட்சியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார், ஏதோ ஒரு சென்னைத் தெருவின் முச்சந்தியில் நிகழ்ச்சி நடந்தது. தொகுப்பாளினி துவங்கச் சொன்ன பின்னால்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
பொருதும், கும்மாளமும் விளையாட்டும்
June 28, 2008, 12:29 am | மறுமொழிகள்
June 28, 2008, 12:29 am | மறுமொழிகள்
"தமிழில் sports & games என்பதை எப்படிப் பாகுபடுத்துவது?" என்று திரு. பாலா சுப்ரா 3/8/2004 அன்று அரையர் குழும்பில் (Rayar kaapi Klub) முன்பு கேட்டிருந்தார். அப்பொழுது அதற்கு ஆராயர் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார். "என்ன பாலா கலாய்க்கிறீர்களா?ஸ்போர்ட்ஸ் = விளையாட்டுகேம்ஸ் = ஆட்டம்இதிலென்ன சந்தேகம்?"ஆராயரின் அந்த மடலைப் படித்த பின்னால் தொடர வேண்டும் என்று முதலில் எண்ணியிருந்தேன்....தொடர்ந்து படிக்கவும் »
ஔ - 4
May 16, 2008, 7:04 am | மறுமொழிகள்
May 16, 2008, 7:04 am | மறுமொழிகள்
18, அடுத்தது ஒளபாசனம் - காலை மாலைகளில் இல்லறத்தோர் வேள்வித் தீ வளர்த்தல். ஒருகாலத்தில் இல்லறத்தில் ஈடுபட்டுள்ள எல்லாப் பெருமானரும் தங்கள் வீட்டில் வேள்வித் தீ வளர்த்தே ஆகவேண்டும்; அவர்கள் வீட்டு அடுப்பாங்கரையில் கங்கு கனன்று கொண்டே இருக்கும். இப்பொழுது, இதையெல்லாம் பின்பற்றுபவர்கள் அரிதிலும் அரிது.வேள்வித் தீயைக் காப்பாற்றுதலை தீ ஓம்புதல் என்று தமிழில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
ஔ - 3
May 13, 2008, 7:06 pm | மறுமொழிகள்
May 13, 2008, 7:06 pm | மறுமொழிகள்
10. அடுத்த சொல் ஒளடணம். "மிளகாய் சுள்ளென்று எரிக்கிறது என்று சொல்லுகிறோம், இல்லையா?" மிளகாய் போர்த்துகீசியரால் நம்மூருக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்னால், நம்மூர் உணவுகளில் பெரிதும் மிளகே பயன்பட்டது. மிளகும் நம் நாவில் எரிக்கிற சுவையைக் காட்டும். எரிதல் என்பது சுவையோடு சூட்டையும் உணர்த்தும் சொல். "நாக்கு எரிகிறது, நாக்கு சுடுகிறது" என்ற இரண்டையும் இடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
ஔ - 2
May 13, 2008, 7:16 am | மறுமொழிகள்
May 13, 2008, 7:16 am | மறுமொழிகள்
8. அடுத்த சொல் ஔஷதம்>ஔடதம். இதையும் பார்த்த மாத்திரத்தில் பலரும் வடசொல் என்றே நினைத்துக் கொள்ளுகிறார்கள். இதுவும் ஓர் இருபிறப்பியே. முன்னே சொன்னது போல், தமிழில் உய்தல் என்பது உயிர் வாழ்தலைக் குறிக்கும். உய்த்தல்/உய்வித்தல் என்பது உயிர் ஊட்டுதலைக் குறிக்கும். அந்த வகையில் உய்த்தம் = உயிர் கொடுக்கும் மருந்து ஆகும். இனி உய்த்தம்>உயத்தம்>உஷத்தம்>உஷதம்>ஔஷதம் என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
ஔ - 1
May 13, 2008, 1:05 am | மறுமொழிகள்
May 13, 2008, 1:05 am | மறுமொழிகள்
வலைப்பதிவர் இராதாகிருஷ்ணன் முன்பு பிப்ரவரி 23, 2005 - ல் ஓர் இடுகை எழுதியிருந்தார். அதில்......---------------------------------"அம்மா இங்கே வா வா..." என்ற அகரவரிசை எழுத்துகள் வரும் பாடலைப் பாடிக் காட்டிக்கொண்டிருந்த போது பாடலில் இருந்த 'ஒள' வரி தடம் புரண்டு, "ஒளவியம் பேசேல்" என்ற ஆத்திச்சூடி வரியை வாய் உளறிவிட்டது. சமாளித்துக் கொண்டு ஒளவியம் என்றால் என்ன என்று யோசித்துப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
பாவேந்தர் நவின்ற ஈழத்துக் கொள்கைகள்
April 24, 2008, 7:23 am | மறுமொழிகள்
April 24, 2008, 7:23 am | மறுமொழிகள்
பாவேந்தரை நினைவுகூர்வது தமிழ்நாட்டுத் தமிழரிடையே கூடச் சிறிது சிறிதாய்க் குறைந்து வருங் காலத்தில், ஈழத் தமிழர் (ஒருசிலரைத் தவிரப்) பெரும்பாலோரிடம் பாவேந்தர் தாக்கம் இல்லாது போவது வியப்பொன்றும் இல்லை. அவர்கள் பாரதி பற்றியாவது ஒருசில அறிந்திருக்கிறார்கள்; ஆனால் பாரதிதாசன் பற்றிய சிந்தனை அவரிடம் குறைந்தே இருக்கிறது. பாவேந்தர் ஏதோ தமிழ்நாட்டிற்கு மட்டுமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
இருவேறு விடுதலை ஆசைகள்
April 23, 2008, 3:44 am | மறுமொழிகள்
April 23, 2008, 3:44 am | மறுமொழிகள்
கீழே வரும் இரு பாட்டுக்களும் தந்தை தன்மகற்குக் கூறியதாய் வரும் சந்தப் பாட்டுக்கள். ஒன்று திருத்தணிகை முருகன் மீது அருணகிரியார் பாடிய 258 ஆம் திருப்புகழ். "மகனே! பெருணவத்தின் பொருளை எனக்குச் சொல்" என்ற சிவன் கூற்றை நினைவுறுத்தி, பிறப்பிலிருந்து விடுபடும் தன் ஆசையைச் சொல்லி "உன்னைத் தொழுகாது இருப்பேனோ" என்று அருணகிரியார் கேள்விகளாய்க் கொட்டுவார். இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
பாவேந்தர் பார்வையில் கல்வி, மதங்கள், மொழிகள்
April 22, 2008, 1:28 am | மறுமொழிகள்
April 22, 2008, 1:28 am | மறுமொழிகள்
கீழே வரும் பாட்டு 1962 இந்திய-சீனப் போரின் போது, 'கல்வி, மதங்கள், மொழிகள்' பற்றிய பார்வையாகப் பாவேந்தர் பாடியது. இந்திய இறையாண்மையை நிலைக்க வைப்பதில், இன்றைக்கும் கூட இந்தக் கருத்துக்கள் இன்றியமையாதவை. "இந்தியா ஒரு பல்தேசிய நாடு" என்ற கொள்கையைத் தெளிவாய் உணர்த்தும் தன் பாடலின் ஊடே, "ஆங்கிலத் தாக்கம் இனியும் இருக்கக் கூடாது" என்பதையும் பாவேந்தர் தெளிவுற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
திசைகள் - 4
April 11, 2008, 12:42 am | மறுமொழிகள்
April 11, 2008, 12:42 am | மறுமொழிகள்
நான் நினைத்தற்கு மேல் இந்தக் கட்டுரைத் தொடர் நீண்டு கொண்டிருக்கிறது. இனித் தெற்கு என்னும் சொல்லுக்கு வருவோம். அவாசி, தக்கணம், யாமினியம், தெக்கு,சிவேதை, தென், இவை தெற்கு எனலாகும்என்பது பிங்கல நூற்பா 14 ஆகும். ஆனால், மாற்று வடிவங்களை ஒன்று சேர்த்து, அகரவரிசை முறையில் பார்த்தால், அவாசி, சிவேதை, தக்கணம் (தெக்கு, தெற்கு, தென் என்பவையெல்லாம் இதோடு சேர்ந்தவையே), யாமினியம் என 4...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
Tyre, Brake and acceleration
April 9, 2008, 11:14 am | மறுமொழிகள்
April 9, 2008, 11:14 am | மறுமொழிகள்
திரு. புருனோ கேட்டிருந்த சொற்களுக்கு என் பரிந்துரை: ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலிகளில் படித்தால், இந்தப் பெயர்கள் எல்லாம் மாட்டுவண்டியில் இருந்தே புலம் பெயர்ந்து இருக்கின்றன. மாட்டுவண்டி நம்மூரிலும் இருக்கிறது. இந்த உறுப்புகளுக்கும் பெயர்கள் கிட்டத்தட்ட இதே பொருட்பாடுகளில் தான் இருக்கின்றன. முதலில் இங்கு கேட்டிருப்பது tyre1485, "iron rim of a carriage wheel," probably from...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
திசைகள் - 3
April 7, 2008, 8:14 am | மறுமொழிகள்
April 7, 2008, 8:14 am | மறுமொழிகள்
விதப்பான திசைகளுக்குப் போவதற்கு முன்னால், பலமுறை நான் எடுத்துரைக்கும் ஓர் அடிப்படைக் கருதுகோளை (basic hypothesis) மீண்டும் இங்கே சொல்ல விழைகிறேன். [இதை நான் அறிந்தது. காரைக்குடி செல்விப் பதிப்பகம் வாயிலாக T.பக்கிரிசாமி அவர்கள் வெளியிட்ட "சிந்தனை வளர - பாடநூல் அமைப்பு" என்னும் அருமையான பொத்தகம். என் சிந்தனை தெளிவுற, அதுவே வழிவகுத்தது.] [ஆதி மனிதனிடம் பருப்பொருள், இடப்பொருட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
திசைகள் - 2
April 3, 2008, 12:05 am | மறுமொழிகள்
April 3, 2008, 12:05 am | மறுமொழிகள்
திசைகளைப் பற்றிய பொதுவான சொற்களாய் மாதிரம், திகை,திசை, வம்பல், விசும்பே,ஆசை, புலமே, உலகு,கோ, காட்டை,அரிதம், அம்பரம், ககுபம், அனைத்தும் திக்கேஎன்று 14 சொற்களை, பிங்கல நிகண்டு தன் 11 ஆம் நூற்பாவில் பதிவு செய்யும். எழுத்து வரிசையில் இவை "அம்பரம், அரிதம், ஆசை, உலகு, ககுபம், காட்டை, கோ, திக்கு, திகை, திசை, புலம், மாதிரம், வம்பல், விசும்பு" என்று அமையும். [இவை தவிர இன்னும் சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
திசைகள் - 1
April 2, 2008, 1:55 am | மறுமொழிகள்
April 2, 2008, 1:55 am | மறுமொழிகள்
"பழங்கால, இடைக்கால இந்திய வடிவியல்" என்ற பொத்தகத்தை (Geometry in Ancient and Medieval India - Dr.T.A.Sarasvati Amma, Motilal Banarsidass Publishers, Delhi, First Edition 1979, Second Revised Edition, 1999, Reprint 2007.) சென்ற வாரம் படித்துக் கொண்டிருந்தேன். [அந்த நூலைப் பற்றியும், அதில் வரும் செய்திகள் பற்றியும் இன்னொரு இடுகையில் பேசலாம்.] நாவலந்தீவின் பலபகுதிகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
ஏழு சுரங்கள் - 4
March 24, 2008, 4:53 am | மறுமொழிகள்
March 24, 2008, 4:53 am | மறுமொழிகள்
ஆறாவது சுரம் தைவதம். இதைத் தெய்வதம் என்று சொல்லித் தெய்வத்தோடு தொடுக்கும் சங்கத விளக்கம் தட்டையாகவே தெரிகிறது. அது எப்படி இந்தச் சுரம் மட்டும் தெய்வம் நாடுவதாய் இருக்க முடியும்? மற்றவை எல்லாம் தெய்வத்தால் ஏற்காதவையா? "ஏழிசையாய், இசைப்பயனாய், இன்னமுதாய்......" என்றெல்லாம் பழம் பஞ்சுரப் பண்ணில், சுந்தரர் திருவாரூர் இறைவனை அழைத்திருக்கும் போது, எல்லாச் சுரமும் தெய்வத்...தொடர்ந்து படிக்கவும் »
ஏழு சுரங்கள் - 3
March 23, 2008, 12:48 am | மறுமொழிகள்
March 23, 2008, 12:48 am | மறுமொழிகள்
தமிழ்ச் சுரப்பெயர்கள் காரணப் பெயர்களாய் இருப்பதை முந்தையப் பகுதியிற் பார்த்தோம். இனி, சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் சங்கதப் பெயர்களின் விளக்கத்தை தமிழ் வழியே பெற முயலுவோம். முன்பே சொன்னது போல் பல சங்கதச் சொற்களின் தொடக்கம் பாகதத்துள் இருக்கிறது. அதே பொழுதில், சம கால மொழிகளான பாகதத்திற்கும் பழந்தமிழுக்கும் உறவு இருந்திருக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »
ஏழு சுரங்கள் - 2
March 19, 2008, 3:55 am | மறுமொழிகள்
March 19, 2008, 3:55 am | மறுமொழிகள்
சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், தைவதம், நிஷாதம் என்ற சங்கதப் பெயர்களுக்கும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற தமிழ்ப் பெயர்களுக்கும் உள்ள உறவைச் சட்டென்று ஆய்வின்றிச் சொல்ல முடியாது இருக்கிறது. சட்ஜம் என்பது குரல் என்றும் (இப்படிச் சொல்வது மேவுதிப் போக்கு - majority trend), இல்லையில்லை சட்ஜம் என்பது இளியே என்றும் (இப்படிச் சொல்வது நுணதிப் போக்கு - minority...தொடர்ந்து படிக்கவும் »
ஏழு சுரங்கள் - 1
March 18, 2008, 1:25 am | மறுமொழிகள்
March 18, 2008, 1:25 am | மறுமொழிகள்
தொய்வில்லா நாரை ஒரு கவட்டையிற் கட்டி, வலிந்து இழுத்தால் சுர்ர்ர்.... என்று அதிருமே, அந்த அதிர்ச்சி ஒரு மொழிசாரா ஒலிக்குறிப்பு; (நார் என்ற சொல் கூட நுர்>நர்.... என்னும் ஒலிக்குறிப்பில் கிளைத்தது தான்.) இது போன்று வெவ்வேறு நிகழ்வுகளில் ஏற்படும் ஒலிக்குறிப்புகளைக் கொண்டு இயல் மொழிகள், தம் இயல்புக்கு ஏற்ப, ஒலிப் பொருளை உணர்த்தி, விதப்பான சொற்களை அமைத்திருக்கின்றன. நாரை...தொடர்ந்து படிக்கவும் »
சுழற்சி மீப்பேறு
March 6, 2008, 8:23 am | மறுமொழிகள்
March 6, 2008, 8:23 am | மறுமொழிகள்
அண்மையில் cyclical repair என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லுவது என்று தமிழுலகம் மடற்குழுவில் திரு. Jai Simman R. Rangasamy என்பவர் கேட்டிருந்தார். அதற்கு அளித்த மறுமொழி: பொதுவாக repair என்பதைத் தமிழில் நேரடியாகச் சொல்லாமல், சுற்றிவளைத்துப் பழுது பார்த்தல் என்றே சொல்லுகிறார்கள். பழுது பார்த்தல் என்பது to rectify faults என்பதற்கே சரியாக வரும். பெரும்பாலான இடங்களில், repair என்பது to...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
தமிழில் இயற்பெயர் சூட்டுங்கள்
February 24, 2008, 2:40 am | மறுமொழிகள்
February 24, 2008, 2:40 am | மறுமொழிகள்
தமிழில் மூன்று விதமான பெயர்களைச் சொல்லுவார்கள். "நான், நீ, அவன், இவள், உது, இவர், அவை" போன்றவை சுட்டுப் பெயர்கள். (அவை தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று நிலைகளில் அமையும்.) "காலம், பந்து, மலர்" போன்றவை, பொருளைக் குறிப்பதால் பொருட் பெயர்கள். இவை தவிர, உடன் உய்யும் மாந்தர்களைக் குறிக்கும் படி, இராமன், இலக்குவன், இனியன், முகிலன் என்றும் பெயரிடுகிறோம்; மூன்றாவதாய் உள்ளதை,...தொடர்ந்து படிக்கவும் »
சிலம்பில் வரலாறு - 2
February 22, 2008, 8:12 am | மறுமொழிகள்
February 22, 2008, 8:12 am | மறுமொழிகள்
2. சிலம்பின் பதிகம்பதிகம் என்ற சொல்லிற்குத் தமிழிற் பல பொருண்மைகள் உண்டு என்றாலும், பலரும் இரு பொருண்மைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள். ஒன்று: தேவாரம், நாலாயிரப் பனுவல் போன்றவற்றில் பத்துப் பத்துப் பாடற்தொகுப்புகளாய் அமையும் தொகுதியைக் குறிப்பது. (பல்து>பத்து>பத்திகம்>பதிகம் என்று இங்கு புரிந்து கொள்ள வேண்டும். சிலபோது பத்திற்கும் மேலே போய், இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
சிலம்பில் வரலாறு - 1
February 22, 2008, 2:46 am | மறுமொழிகள்
February 22, 2008, 2:46 am | மறுமொழிகள்
இந்தக் கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கிய காரணமே சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டமும், அதன் தொடர்ச்சியான செய்திகளும் ஆகும். "சேரன் செங்குட்டுவனின் காலம் என்ன? சிலம்பில் விவரிக்கப்படும் வடக்கு நோக்கிய படையெடுப்பு உண்மையிலேயே நடந்ததா? அல்லது அது வெறும் கதையா? (அதைக் கதை என்று சொல்லிச் சிலம்பின் காலத்தை கி.பி. 500 க்குப் பின் தள்ளும் ஆய்வாளர்கள் வையாபுரியாரில் இருந்து,...தொடர்ந்து படிக்கவும் »
நாளும் கூடும் ஆங்கிலத் தாக்கம்
February 20, 2008, 9:46 am | மறுமொழிகள்
February 20, 2008, 9:46 am | மறுமொழிகள்
இந்த வாரம் (21/2/2008) வெளிவந்த குங்குமம் தாளிகையில் "ஆதலினால்..." என்ற தொடரில் "முகத் திருத்தம்" பற்றிப் பேசவந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு மேல்தட்டு முடிதிருத்தகத்தில் நடந்த செய்தியைச் சொல்லுகிறார். அதை இங்கு கீழே கொடுத்திருக்கிறேன்.-------------------------வயதானவர், தயக்கத்துடன் "தம்பி சொன்னது புரியலை" என்றார். "இங்கிலீஷ் தெரியாத ஆளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்
அளவுச் சொற்கள் - 4
February 19, 2008, 8:52 am | மறுமொழிகள்
February 19, 2008, 8:52 am | மறுமொழிகள்
ஏற்கனவே மூன்று பகுதிகளோடு இந்தத் தொடர் அப்படியே நின்று போயிற்று. அவை வருமாறு:அளவுச் சொற்கள் - 1அளவுச் சொற்கள் - 2அளவுச் சொற்கள் - 3இனித் தொடர்ச்சி. இந்தப் பகுதியில் முதலில் ஒருசேர நான்கு சொற்களைப் பார்க்கப் போகிறோம். அவை minimum, minor, minority, minute ஆகியவை ஆகும். இந்தச் சொற்களில் வரும் min என்ற பகுதியும் நுண் என்பதோடு தொடர்பு கொண்டது. நுண் என்பதும் முன்னால் சொன்னது போல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
மீட்டும் ஒரு நாள்காட்டு
February 18, 2008, 7:46 am | மறுமொழிகள்
February 18, 2008, 7:46 am | மறுமொழிகள்
இரண்டே முக்கால் ஆண்டுகளுக்கு முன்னாலே ஒரு கிழமை (= வாரம்) முழுதும் நாள்காட்டச் சொல்லி தமிழ்மணத்தில் கேட்டுக் கொண்டார்கள். (அப்படி நாள்காட்டியது 11/4/2005 பங்குனித் திங்கள் பரணி நாள் திங்கட்கிழமை.) இப்பொழுது, மீண்டும் நாள் காட்டுவது 18/2/2008 மாசித் திங்கள் 6 ஆம் திகதி கும்ப ஞாயிறு புனர்பூச நாள் திங்கட்கிழமை. இன்னும் மூன்று நாட்களில் மாசி மகம். தமிழ்நாடெங்கணும் சிவம், விண்ணவம் ஆகிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
மீள்தொடங்கல்
February 17, 2008, 5:09 pm | மறுமொழிகள்
February 17, 2008, 5:09 pm | மறுமொழிகள்
தமிழகத்தில் தெரியும் அரசியல் தடுமாற்றம், ஈழம் பற்றிப் பேசுவதில் விரவிக் கிடக்கும் அச்சப் போக்கு, "என்னை ஒட்டாது இருந்தால் போதும்" என்னும் தாமரையிலைத் தண்ணீர்மை, தமிழகம் - ஈழம் பற்றிய வரலாற்றுத் தெளிவில்லாமை - இது போன்ற கருத்துகள் குறித்துத் துண்டும் துணுக்குமாய் நான் கேட்ட ஒரு உரையாடலும், இதன் முடிவில் தமிழர்போக்கு பற்றியிருந்த சில முன்னிகை(comment)களும் என் மனத்தை...தொடர்ந்து படிக்கவும் »
காலங்கள் - 7
January 29, 2008, 12:17 am | மறுமொழிகள்
January 29, 2008, 12:17 am | மறுமொழிகள்
சூரிய மானத்து ஞாயிறுகள்இராசிப் பெயர்களை ஆய்ந்து பார்க்கத் தொடங்கி, இதுவரை மூன்று பெயர்களைப் பாத்த்தோம். இந்த இராசிப் பெயர்கள் சூரிய மான வழக்கத்தில் ஞாயிற்று மாதப் பெயர்களாகக் குறிக்கப் படும். பல்லவர், இந்த இடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது சோழர், பாண்டியர் காலக் கல்வெட்டுகளாகும். அவற்றில், தைத் திங்கள், சுறவ ஞாயிறு என்று திங்கள் மாதப் பெயர்களும், ஞாயிறு மாதப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
காலங்கள் - 6
January 24, 2008, 11:59 pm | மறுமொழிகள்
January 24, 2008, 11:59 pm | மறுமொழிகள்
இராசிச் சிதறலும் உருவகப் பெயர்களும்(முன்னே சிங்கை இணையம் வலையிதழில் நான் எழுதிவந்த காலங்கள் தொடரின் ஐந்தாம் அதிகாரத்தை சில மாதங்கள் முன் இங்கு வெளியிட்டேன். வானியலோடு தொடர்பு உள்ள இந்தத் தொடரை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தொடருவதாகச் சொன்னேன். இப்பொழுது ஆறாம் அதிகாரம்.) கோள்களின் நகர்வைக் கண்டும், அது நம் வாழ்வை என்ன செய்யும் என்றும், படபடத்துத் தவிக்கும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பண அட்டைகள்
November 30, 2007, 1:13 pm | மறுமொழிகள்
November 30, 2007, 1:13 pm | மறுமொழிகள்
பல்வேறு பண அட்டைகள் குறித்து ஓர் உரையாடல் தமிழுலகம் மடற்குழுவில் முன்பு ஒருமுறை எழுந்தது. சில விளக்கங்கள் கொடுத்து அங்கு தந்த சொல்லாக்கங்களை இங்கு தருகிறேன்.swipe card:- வயப்பு அட்டை;...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 5
October 1, 2007, 7:49 am | மறுமொழிகள்
October 1, 2007, 7:49 am | மறுமொழிகள்
இராமர் சேது என்று இன்று தவறாகச் சொல்லப்படும் மண்திட்டு ஒரு பக்கம் இராமேசுரத்தையும் (1964 புயலில் நம் கண்ணறிய அழிந்து போன பழைய தனுக்கோடி) இன்னொரு பக்கம் தலைமன்னாரையும் இணைத்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு
அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 4
October 1, 2007, 4:37 am | மறுமொழிகள்
October 1, 2007, 4:37 am | மறுமொழிகள்
"அரக்கனும் தமிழும்" என்ற முன்பாதித் தலைப்பைப் பற்றி இதுகாறும் பேசிய நாம், "தமிழும், இராமர் சேதுவும்" என்ற பின்பாதித் தலைப்பிற்குள் சென்று பார்த்துவிட்டு, மீண்டும் முன்பாதித்...தொடர்ந்து படிக்கவும் »
அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 3
September 27, 2007, 1:46 am | மறுமொழிகள்
September 27, 2007, 1:46 am | மறுமொழிகள்
"அரக்கர் என்பவர் கருமைகூடிய சிவந்த நிறத்துத் தனி இனத்தார் (tribe); நாவலந்தீவில் இருந்த பல இனத்தவர் போல இவரும் ஒருவர்" என்ற செய்தியோடு, இன்னுஞ் சில பழம் பாடல்களை அடுத்துப் பார்க்கலாம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 2
September 23, 2007, 2:06 am | மறுமொழிகள்
September 23, 2007, 2:06 am | மறுமொழிகள்
புறம் 378 கீழ்வருமாறு போகிறது.தென்பரதவர் மிடல் சாயவடவடுகர் வாள் ஓட்டியதொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்நற்றார்க் கள்ளின் சோழன்...தொடர்ந்து படிக்கவும் »
அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 1
September 22, 2007, 2:23 am | மறுமொழிகள்
September 22, 2007, 2:23 am | மறுமொழிகள்
அண்மையில் "இராவணனை அரக்கன் என்று சொல்லும் புறநானூறு" என்ற இடுகையில் திரு.குமரன் சங்க இலக்கியத்தில் வரும் இராம காதைச் செய்தியைச் (புறம் 378) சொல்லியிருந்தார். அரக்கன் என்ற சொல்லாட்சி...தொடர்ந்து படிக்கவும் »
நுணலும் அடவும்
August 21, 2007, 5:35 am | மறுமொழிகள்
August 21, 2007, 5:35 am | மறுமொழிகள்
இரவெல்லாம் ஓயாது எகத்தாள மழைப்பொழிவு;மழைகுறையத் தூறலிடை, மடுவெங்கும் நீரொதுங்க,எங்கேயோ தோட்டத்தில், ஏறிவரும் நுணலோசை;நள்ளிரவில் துயில்விலக்கி, நான்விழிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
வலைச் சொற்கள் (webterms)
August 18, 2007, 1:37 am | மறுமொழிகள்
August 18, 2007, 1:37 am | மறுமொழிகள்
வலைச் சொற்கள் (webterms) என்ற தலைப்பில் wall paper, banner, ring tone, mobile, gadget, widget, screen saver ஆகியவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களை விக்சனரி மடற்குழுவில் கேட்டிருந்தார்கள். அதற்கான பரிந்துரையை அங்கு பதிந்தது போக,...தொடர்ந்து படிக்கவும் »
வேங்கடத்து நெடியோன் - 3
August 13, 2007, 1:44 am | மறுமொழிகள்
August 13, 2007, 1:44 am | மறுமொழிகள்
பின்னால் வந்த எல்லா ஆழ்வார் பாடல்களிலும், "வேங்கடத்தான், வேங்கடவன், வேங்கட வாணன், வேங்கடத்துள்ளான், வேங்கடத்து உறைவான், வேங்கடத்து நின்றான், வேங்கடமுடையான், வேங்கட நாடன், வேங்கடக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
வேங்கடத்து நெடியோன் - 2
August 9, 2007, 12:09 am | மறுமொழிகள்
August 9, 2007, 12:09 am | மறுமொழிகள்
வேங்கட மலையையும், அதில் திருமால் குடிகொண்டுள்ளதையும், அவன் பெயர் நெடியோன் என்பதையும் நமக்குக் கிடைத்தவற்றில் முதலில் பதிவு செய்த ஆவணம் சிலப்பதிகாரம் தான். நாம் கவனிக்க வேண்டியது...தொடர்ந்து படிக்கவும் »
வேங்கடத்து நெடியோன் - 1
August 8, 2007, 11:36 am | மறுமொழிகள்
August 8, 2007, 11:36 am | மறுமொழிகள்
அண்மையில் வேங்கடமுடையானின் இற்றைக் காலப் பெயரான "சீனிவாசனைத் தமிழில் சொல்ல முடியாதா?" என்பது பற்றிய உரையாடல் திரு. கண்ணபிரான் ரவிசங்கரின் வலைப்பதிவில் எழுந்தது. அந்தப் பதிவையும்,...தொடர்ந்து படிக்கவும் »
எற்றி நகரல்
July 9, 2007, 4:22 am | மறுமொழிகள்
July 9, 2007, 4:22 am | மறுமொழிகள்
டிங்டாங் டிங்டாங் டிங்டாங் கென்றே திண்'னுன்னு கிணுக்குது கோயில்மணி;எங்கள் பேரனோ எற்றி நகர்கிறான், எங்கள் வளவினில் வலமாக!தாவி விழுகிறான்; மீண்டு எழுகிறான்; ...தொடர்ந்து படிக்கவும் »
தாலி - 7
July 6, 2007, 2:41 am | மறுமொழிகள்
July 6, 2007, 2:41 am | மறுமொழிகள்
மஞ்சள் பற்றிப் பல செய்திகளை முன்னே கூறிய நான், ஒரு முகன்மையான மஞ்சட் காய்/பழம் பற்றிச் சொல்ல மறந்துபோனேன். வேறொன்றுமில்லை, மாங்காய்/மாம்பழம் பற்றித் தான் சொல்ல மறந்தேன். மாங்காய்...தொடர்ந்து படிக்கவும் »
தாலி - 6
July 5, 2007, 4:57 am | மறுமொழிகள்
July 5, 2007, 4:57 am | மறுமொழிகள்
சென்ற இடுகையில், 6 மாதத்தில் இருந்து 8 மாதம் ஆகிய குழந்தை, தன் மழலைக்கு நடுவில், வாய்நீர் சிந்தி, ஐம்படைத்தாலியை நனைத்த காட்சியைக் கண்டோ ம். நம்மூர்த் தாய்மார்களின் அடுத்த எதிர்பார்ப்பு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
தாலி - 5
July 3, 2007, 1:15 am | மறுமொழிகள்
July 3, 2007, 1:15 am | மறுமொழிகள்
தாலி என்ற சொல்லிற்குப் பலரும் "மணமகளுக்குத் திருமணத்தில் மணமகன் அணிவிக்கும் கலன்" என்றே விதப்பாகப் புரிந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அது மட்டுமே பொருட்பாடல்ல; வேறு சிலவும் இந்தச்...தொடர்ந்து படிக்கவும் »
free trade / fair trade - 2
June 28, 2007, 5:08 am | மறுமொழிகள்
June 28, 2007, 5:08 am | மறுமொழிகள்
இனி முகுந்திற்கு எழுதிய மடல். இது தமிழ் உலகம் மடற்குழுவில் வந்தது என்று எண்ணுகிறேன்.---------------------------------------அன்பிற்குரிய முகுந்த்,[பின் குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
free trade / fair trade - 1
June 28, 2007, 5:06 am | மறுமொழிகள்
June 28, 2007, 5:06 am | மறுமொழிகள்
அண்மையில் நண்பர் ஒருவர் தனிமடலில் free trade, fair trade என்பதற்கான இணைச்சொற்களைக் கேட்டிருந்தார். பின்னால், அவருக்கு மறுமொழித்திருந்தேன். இது பொதுவிலும் பயன் படட்டும் என்ற கருத்தில் இங்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
தாலி - 4
June 19, 2007, 1:08 am | மறுமொழிகள்
June 19, 2007, 1:08 am | மறுமொழிகள்
இவ்வளவு நீண்டு, மங்கலம்/மஞ்சள் பற்றி முன் இடுகைகளிற் பேசிய நாம், அடுத்து, ஒளிப்பொருள் கொடுக்கும் வேர்ச்சொற்கள் ஆன "கொல், பொல், இல், எல், அல், ஒல், சுல், முல், வல்" போன்றவற்றையும், அவற்றில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
தாலி - 3
June 15, 2007, 11:24 am | மறுமொழிகள்
June 15, 2007, 11:24 am | மறுமொழிகள்
சரி, மஞ்சள் என்ற கருத்துப் புரிகிறது, மஞ்சட்பொருள் திருமணத்தில் எப்பொழுது வந்தது? முன்னே சொன்னது போல், இந்தக் காலத்தில் நாம் காணும் தாலிகட்டுப் பழக்கம் தமிழருள் எப்போது...தொடர்ந்து படிக்கவும் »
தாலி - 2
June 15, 2007, 6:32 am | மறுமொழிகள்
June 15, 2007, 6:32 am | மறுமொழிகள்
இனி மகாவின் முதற் கூற்றுக்கு வருவோம். 1. தாலி - என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை.வேர்ச்சொல்லை இனங் காண்பது ஒருவேளை பேரா.தொ.பரமசிவனுக்கு வாய்க்காது...தொடர்ந்து படிக்கவும் »
தாலி - 1
June 14, 2007, 6:17 am | மறுமொழிகள்
June 14, 2007, 6:17 am | மறுமொழிகள்
அண்மையில் "நந்தவனம்" என்ற வலைப்பதிவில், "தேவையில்லாத தாலியும் உருப்படியான தகவல்களும்" என்ற தலைப்பில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர்...தொடர்ந்து படிக்கவும் »
Digital -2
May 25, 2007, 2:39 am | மறுமொழிகள்
May 25, 2007, 2:39 am | மறுமொழிகள்
நண்பர் கணேசனின் முன்னிகைக்கு மறுமொழியாக மேலும் தொடர்ந்தேன். அது இங்கு இரண்டாம் பகுதியாய் வருகிறது.---------------------------அன்பிற்குரிய கணேசன்,வழக்கம் போல நீங்கள் உங்கள் வழியிலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
Digital - 1
May 25, 2007, 1:33 am | மறுமொழிகள்
May 25, 2007, 1:33 am | மறுமொழிகள்
சில மாதங்களுக்கு முன் திரு. பாஸ்டன் பாலாஜி digital என்பதற்கு இணையாக முன்பு மடற்குழுக்களில் நான் பரிந்துரைத்த தமிழ்ச் சொல்லின் பின்புலம் பற்றித் தனிமடலில் கேட்டிருந்தார். அதோடு, "அந்தச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
இனி
May 24, 2007, 12:23 am | மறுமொழிகள்
May 24, 2007, 12:23 am | மறுமொழிகள்
அகத்தியர் மடற்குழுவில், தொகுப்பாளினி, கவிதாயினி பற்றிய தன் மடலின் (16/5/07) ஊடே "தொகுப்பாளினி, கவிதாயினி போன்ற ஆக்கங்கள் வடமொழியைப் பார்த்து ஏற்பட்டவை; கணினி என்பது கூட அது போன்றது தான்;...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
வாகை மாற்றங்கள் (phase changes) - 2
May 10, 2007, 3:21 am | மறுமொழிகள்
May 10, 2007, 3:21 am | மறுமொழிகள்
சென்ற பதிவில் வெம்மை, சூடு, வெப்பம் என்ற சொற்களைப் பயன்படுத்தி இருந்தாலும், இந்தச் சொற்களின் வரையறையைப் புரிந்து கொண்டு மேலும் செல்வது, பூதியலுக்குள் ஆழமாய்ப் போக உதவி செய்யும். இந்த...தொடர்ந்து படிக்கவும் »
வாகை மாற்றங்கள் (phase changes)
May 9, 2007, 3:29 am | மறுமொழிகள்
May 9, 2007, 3:29 am | மறுமொழிகள்
கதை, கவிதை, துணுக்கு ஆகியவற்றை நாடி இந்த வலைப் பக்கத்திற்கு வந்திருக்கும் நண்பர்கள் மன்னியுங்கள். வேறு பக்கங்களில் தான் அவற்றை நீங்கள் காண வேண்டும். தமிழ் என்றால் "கதை, கவிதை,...தொடர்ந்து படிக்கவும் »
செகை - 2
April 21, 2007, 4:30 am | மறுமொழிகள்
April 21, 2007, 4:30 am | மறுமொழிகள்
செகுத்தலின் பயன்பாடு முன்னாற் சொன்ன சொற்களோடு மட்டும் அமையவில்லை. பார்ப்பனர்கள் தங்களை அடையாளம் சொல்லிக் கொள்ளும் போது, ஒவ்வொருவரும் தாங்கள் எந்தக் கூட்டம் என்பதோடு (...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
செகை - 1
April 20, 2007, 6:11 am | மறுமொழிகள்
April 20, 2007, 6:11 am | மறுமொழிகள்
பொதுவாய் sex என்ற சொல்லுக்கு இணையாய், இடத்திற்குத் தகுந்தாற் போல், பலரும் காமம், பால் என்ற சொற்களை கையாளுகிறார்கள். இன்னும் சிலர், இதைப் பேசும் போது, சுற்றி வளைத்தே சொல்லப் பழக்கப் பட்டு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
தமிழ்ப்படுத்தலும் பேரா. ரூமியும்
April 18, 2007, 9:09 am | மறுமொழிகள்
April 18, 2007, 9:09 am | மறுமொழிகள்
இது 2004 சனவரியில் Raayar Kaapi Klub - இல் எழுதியது. அப்பொழுது "தமிழ்ப்படுத்தலும் தமிழ் மனமும்" என்ற கட்டுரையை திரு நாகூர் ரூமி எழுதியிருந்தார். திண்ணையில் அது வெளிவந்தது என்று நினைக்கிறேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
தமிழில் அறிவியல்
April 11, 2007, 5:44 am | மறுமொழிகள்
April 11, 2007, 5:44 am | மறுமொழிகள்
முன்பு ஒருமுறை நண்பர் மாலனுக்கும், எனக்கும் மடற்குழுக்களில் ஒரு சுவையான உரையாடல் நடந்தது. அதை இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன். (என் உரையில் இருந்த ஒருசில நடைப் பிழைகளை இப்பொழுது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
தெள்ளிகை - 3
April 8, 2007, 5:00 am | மறுமொழிகள்
April 8, 2007, 5:00 am | மறுமொழிகள்
உருப்படியான வேலையைச் செய்துகொண்டு இருந்த போது, இடைவிலகலாய் தனித்தமிழ் பற்றிய ஒரு தொடர் கட்டுரையையும், ஓதி (hotri) பற்றிய விளக்கத்தையும், இன்னும் சில கட்டுரைகளையும் என் வலைப்பதிவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
சுடர்வழியே செய்தி
March 30, 2007, 2:45 am | மறுமொழிகள்
March 30, 2007, 2:45 am | மறுமொழிகள்
ஆர்வமுடன் எழுதும் பலரிடம் சுற்றிக் கொண்டிருந்த இந்தச் சுடர் என்னிடம் வந்து சேரும் என்று என் கனவில் கூட நினைக்கவில்லை.விடுதலை வீரன் வீரபாண்டியக் கட்டமொம்மனுக்கு ஒரு வழக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
இந்திய மட்டைப் பந்தும், எதிர்காலமும்
March 25, 2007, 1:30 am | மறுமொழிகள்
March 25, 2007, 1:30 am | மறுமொழிகள்
தோனி வெளியேற்றப் பட்டவுடனேயே, "மேற்கொண்டு பார்ப்பது வீண், இனி இவர்கள் உருப்பட மாட்டார்கள்" என்றெண்ணி எரிச்சலுடன், தொலைக்காட்சியை அணைத்துப் படுக்கப் போய்விட்டேன். மறுநாள் காலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு
அதிட்டம்
March 19, 2007, 11:56 pm | மறுமொழிகள்
March 19, 2007, 11:56 pm | மறுமொழிகள்
சொல் ஒரு சொல் பதிவில் இட்ட இந்தப் பின்னூட்டம், இங்கு தனிப் பதிவாகச் சேமிக்கப் படுகிறது.-----------------------------------அதிட்டம் பற்றிய இடுகையைப் படித்தேன். இங்கு பலரும் கூறிய நல்லூழ், ஆகூழ்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
ஓதி - 3
February 27, 2007, 5:37 pm | மறுமொழிகள்
February 27, 2007, 5:37 pm | மறுமொழிகள்
hotr என்ற வேதச் சொல்லிற்கு இணையாக zaotr என்ற சொல் இரானிய நடைமுறையில் அவஸ்தாவில் சொல்லப்படும். சாரத்துஸ்ரா கூட ஒரு zaotr தான் என்று ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். வட இந்திய ஒலிப்பிற்கும், இரானிய...தொடர்ந்து படிக்கவும் »
ஓதி - 2
February 27, 2007, 2:53 am | மறுமொழிகள்
February 27, 2007, 2:53 am | மறுமொழிகள்
hotri என்பதற்கு வேராக, hu (to sacrifice, to eat, to please; deri. huta, hutva_, ho_tum) என்ற தாது பாடத்தின் மூன்றாம் வகை வேர்ச்சொல்லைத் தான் மோனியர் வில்லிம்சு காட்டும். [hve_ (to vie with, to challenge, to call, to ask, to invoke; der. hu_ta, hve_ya, hva_tum, a_hu_ya) என்ற முதல் வகை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
ஓதி - 1
February 27, 2007, 1:06 am | மறுமொழிகள்
February 27, 2007, 1:06 am | மறுமொழிகள்
என்னுடைய தெள்ளிகை - 2 இடுகைக்கு கல்வெட்டு ஆய்வாளர் திரு.இராமச்சந்திரன் பின்னூட்டியிருந்தார். அதன் மறுமொழி இங்கு தனிப்பதிவாகிறது: [சட்டென்று இதை எழுத முடியவில்லை. என்னுடைய அலுவலுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
தனித் தமிழ் - 5
February 21, 2007, 7:55 am | மறுமொழிகள்
February 21, 2007, 7:55 am | மறுமொழிகள்
இந்தத் தொடர்வரிசைக் கட்டுரைகளில் இப்போதைக்கு இது தான் கடைசிக் கட்டுரை."தனித் தமிழ் என்ற பெயரில் இடையில் வழங்கிய சலிப்பூட்டும் போலி நடையில் எழுதிய காழ்ப்புணர்ச்சி உமிழும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
தனித் தமிழ் - 4
February 21, 2007, 5:03 am | மறுமொழிகள்
February 21, 2007, 5:03 am | மறுமொழிகள்
அடுத்து "பண்டைத் தமிழக நகரங்கள் பலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. சீர்காழி நகரின் பெயர்கள் சம்பந்தர் தேவாரத்திலும், மதுரை நகரின் பெயர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
தனித் தமிழ் - 3
February 21, 2007, 3:48 am | மறுமொழிகள்
February 21, 2007, 3:48 am | மறுமொழிகள்
இனி "உண்மையில் ஒழுங்காக சம்ஸ்கிருதம் படித்த எந்தத் தமிழ் அறிஞரும் அம்மொழியை வெறுத்ததில்லை, நேசிக்கவே செய்தனர். அருணகிரி நாதர், தாயுமானவர் முதல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
தனித் தமிழ் - 2
February 21, 2007, 1:20 am | மறுமொழிகள்
February 21, 2007, 1:20 am | மறுமொழிகள்
அடுத்து, திரு. தமிழன் தன் பின்னூட்டில், // சமசுகிருதம்தான் உலகமொழிக்கெல்லாம் தாய்பாசை என்று சொல்ல சமசுகிருதம் நன்கறிந்த அவர் அப்படியென்றால் தமிழ்தான் தந்தை மொழி என்று மறுமொழி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
தனித் தமிழ் - 1
February 20, 2007, 11:25 pm | மறுமொழிகள்
February 20, 2007, 11:25 pm | மறுமொழிகள்
அண்மையில் இந்தியக் குடியரசுத் தலைவரின் சங்கதம் பற்றிய உரையை திரு.ஜடாயு தன்னுடைய வலைப்பதிவில் கொடுத்திருந்தார். அதில் எழுந்த பின்னூட்டுக்களுக்கு மறுமொழி சொல்லப் புகுந்தவர் தொடர்பே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
தெள்ளிகை - 2
February 15, 2007, 12:11 am | மறுமொழிகள்
February 15, 2007, 12:11 am | மறுமொழிகள்
"சரி, கல்வியை விட்டுவிடலாம், teaching- என்பதைச் சொல்லிக் கொடுப்பது என்று சொல்லலாமா?" என்று கேட்டால், அங்கேயும் ஒரு டொக்குப் போட வேண்டியிருக்கிறது.சுல்>சொல் என்ற வளர்ச்சியிலும் கூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
தெள்ளிகை - 1
February 13, 2007, 1:50 am | மறுமொழிகள்
February 13, 2007, 1:50 am | மறுமொழிகள்
Open source teaching பற்றிய ஒரு வலைதளத்தைச் சுட்டி, "அதைத் தமிழில் மொழிமாற்றித் தர இயலுமா?" என்று, நண்பர் மணிவண்ணன், அவரிடம் இன்னொருவர் கேட்டதைப் புறவரித்து (forward), ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
கணிதச் சொற்கள்
January 29, 2007, 8:12 am | மறுமொழிகள்
January 29, 2007, 8:12 am | மறுமொழிகள்
ஒரு மாதத்திற்கு முன்னால், தமிழ் விக்சனரி மடற்குழுவில் கணிதம் பற்றிய சிறு சொற்தொகுப்பைக் கொடுத்து, இணையான தமிழ்ச் சொற்களைக் கேட்டிருந்தார்கள். (விக்சனரி மூலமாய் அந்த இளைஞர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
தானமும் கொடையும் - 3
January 23, 2007, 5:31 pm | மறுமொழிகள்
January 23, 2007, 5:31 pm | மறுமொழிகள்
இனித் தானம் என்ற சொல்லின் இலக்கிய ஆட்சிகளைப் பார்ப்போம்.[அதற்கு முன் ஓர் இடைவிலகல். ஒரு சிலர் தமிழ்ச்சொற்கள் பற்றி ஒரு விந்தையான கண்ணோட்டம் வைத்திருக்கிறார்கள்; குறிப்பிட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
தானமும் கொடையும் - 2
January 22, 2007, 11:54 pm | மறுமொழிகள்
January 22, 2007, 11:54 pm | மறுமொழிகள்
"தானத்தின் வேர்ச்சொல் விளக்கத்திற்கு போகலாமா?" என்று சென்ற பகுதியில் முடித்திருந்தேன். பூங்கா வலையிதழுக்காக "பொங்கலோ பொங்கல்!" என்ற கட்டுரை எழுதியதிலும், சென்னையில் பொத்தகக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
பொங்கலோ பொங்கல்!
January 15, 2007, 11:55 pm | மறுமொழிகள்
January 15, 2007, 11:55 pm | மறுமொழிகள்
(இது பூங்கா வலையிதழுக்காக, அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், எழுதிய கட்டுரை. என்னுடைய வலைப்பதிவில் சேர்த்து வைப்பதற்கும், பின்னூட்டு இருந்தால் மறுமொழிக்கவும் வேண்டி, இங்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
தானமும் கொடையும் - 1 "தானமும் கொடையும் ஒன்றா?" என்று நண்பர...
January 12, 2007, 1:50 am | மறுமொழிகள்
January 12, 2007, 1:50 am | மறுமொழிகள்
தானமும் கொடையும் - 1 "தானமும் கொடையும் ஒன்றா?" என்று நண்பர் கோவி.கண்ணண், சொல் ஒரு சொல் பதிவில் கேட்டிருந்தார். கேட்டதோடு அதுபற்றிக் கருத்துச் சொல்லும் படி, அங்கு அவர் அளித்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
பாலை - தொடர்ச்சி - 2
January 2, 2007, 2:06 am | மறுமொழிகள்
January 2, 2007, 2:06 am | மறுமொழிகள்
உலக்கைப் பாலை மரம், 15-18 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது என்றாலும், பல இடங்களில் 8 மீட்டர் அளவிலே தான் காணப் படுகிறது. மரத்தில் நிறைய முடிச்சுக்கள் இருக்கும். சிறுகிளைகள் உருவாகி,...தொடர்ந்து படிக்கவும் »
